திருப்பூர் மாவட்டம், பல்லடம் – தாராபுரம் சாலையில், மேட்டுக்கடை முதல் குண்டடம் வரை இரு வழிப்பாதையிலிருந்து நான்கு வழிப்பாதை அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்பட்டதை, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து போக்குவரத்தை துவங்கி வைத்தார். இதில் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.