திருப்பூர், மே 25- கோவை - திருப்பூர் மாவட்டங்களின் பாசன ஆதாரமாக உள்ள பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் இருந்து திண்டுக் கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகு திக்கு தண்ணீர் கொண்டு செல்வது என் கிற பயனற்ற திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்ட செயலா ளர் ஆர்.குமார், கோவை மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன், மாவட் டச் செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை - திருப்பூர் மாவட்டங்களில் பரம்பிக்குளம் ஆழி யாறு திட்டத்தின் மூலம் 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வரு கிறது. இதில், ஆழியாறு ஆற்றுப் பகுதி யில் 6,400 ஏக்கரும், பாலாறு பகுதியில் 2,960 ஏக்கரும், பழைய ஆயகட்டு பகுதி களாக இரண்டு போக பாசனம் பெறும் நிலம் நஞ்சை சாகுபடிக்கும், பொள் ளாச்சி ஆனைமலை தாலுகாக்களில் ஆழியார் புதுவாய்காளில் 44,000 ஏக்கரும், திருமூர்த்தி அணையிலிருந்து 3,77,152 ஏக்கருமாக 4,21,152 ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது. பாசனப் பகுதி நான்கு மண்டலங்களாக பிரிந்து இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை புஞ்சை பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மிகவும் பற்றாக்குறை நீரிலேயே இப்பகுதி விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
பிஏபி திட்டத்திலிருந்து பொள்ளாச்சி நகராட்சி, உடுமலைப்பேட்டை நக ராட்சி, பொள்ளாச்சி வடக்கு, பொள் ளாச்சி தெற்கு, ஆனைமலை, கிணத்துக் கடவு, உடுமலை மற்றும் குடிமங்கலம் ஒன்றியம், மடத்துக்குளம் தாலுகா விற்கும் மற்றும் 15 பேரூராட்சிகளுக்கும் என கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கோவை, குறிச்சி, குனியமுத்தூர் நகராட் சிகளுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பிஏபி திட்டப் பகுதியில் இருந்து தினசரி சுமார் 100 கன அடி தண்ணீர் குடிநீருக்காக மட்டும் எடுக்கப்படுகிறது. கேரளத்தில் நவயுக சிற்பி இ.எம்.எஸ்.நம்பூதிரி பாட் அவர்களும், தமிழகத்தில் பெருந்தலை வர் காமராஜர் அவர்களும் முதலமைச் சர்களாக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது நிறைவேற்றப்பட்ட உன்னதமான திட்டம் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம், மிக சிறந்த பாசன திட்டமாகும். இத்திட்டத்தில் தமிழகத் திற்கு 30.50 டி.எம்.சி யும், கேரளத்துக்கு 19.55 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும் என்கிற அடிப்படையில் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் கூட்டு முயற்சியில் உருவான திட்டமாகும். ஆனால், திட்டம் நிறைவேற்றியதற்கு பின் கடந்த 60 ஆண்டு காலமாக தமி ழகத்திற்கு 30.50 டி.எம்.சி-க்கு பதிலாக சராசரியாக 20 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே கிடைத்து வருகிறது. இதில், 3 டி.எம்.சி தண்ணீர் குடிநீருக்காக எடுக்கப் படுகிறது, மீதி உள்ள 17 டி.எம்.சி. தண்ணீரில் தான் 4.25 லட்சம் ஏக்கர் நிலங்களில் 3.5 லட்சம் ஏக்கர் மேல் தென்னை மரங்களை பயிர் செய்துள்ள னர்.
பழைய ஆயக்கட்டுப் பகுதிகளும் தண்ணீர் பற்றாக்குறை காரணத்தினால் நெல், வாழை பயிர்களில் இருந்து மாறி தென்னை பயிர்செய்து வருகின்றனர். புஞ்சை பயிர்களும் செய்ய முடியாத நிலையே உள்ளது. நீண்ட கால பயிரான தென்னை பயிரையே காப்பாற்றுவதற்கு முடியாத நிலையில் தண்ணீர் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டம் செய்திட 2000 ஆண்டில் மடைவிட்டு மடை நீர்ப்பாசனம் என்கின்ற முறையினை அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணா நிதி தலையிலான அரசு விவசாயிகளின் கருத்துக்களின் அடிப்படையில் அமல் படுத்தினார்கள். பி.ஏ.பி. பாசனம் பெறும் பகுதிக ளான கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மழை மறைவு பிரதேசமாக உள்ள பகுதி களும், மிக வறட்சியான பகுதியாகவும் உள்ளது. ஆகவே, விவசாயிகள் தென்னை பயிருக்கு மாறியுள்ள நிலை யில், வறட்சியான காலங்களில் இப்பகுதி களில் ஆயிரம் அடிக்கு மேல் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தென்னை மரங்களை காப்பாற்றி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தண் ணீருக்காக பெரும் ஜீவமரணப் போராட் டத்தில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒட்டன்சத்திரத்திக்கு தண்ணீர் கொண்டு செல்வது என்கின்ற அறிவிப்பு இப்பகுதி விவசாயிகளுக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 2022 ஆம் ஆண்டு ஏப்.6 ஆம் தேதியன்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நீர் வளத்துறை மானியக் கோரிக்கையின் விவாதத்திற்கு பதிலளித்தபோது, பிஏபி திட்ட பகுதியிலுள்ள மக்களுக்கே தண்ணீர் வழங்க இயலாத நிலையில் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் வழங்க முடியாது என்று தெரிவித்தார் கள். ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு ஏற் கனவே அருகாமையில் உள்ள காவேரி, பாலாறு ஆகிய ஆறுகளில் இருந்து குடிதண்ணீர் வந்து கொண்டுள்ளது. பாலாறு பரப்பலாறு, குதிரையாறு ஆகிய அணைகளில் இருந்து புதிய திட்டங்களை தீட்டலாம் அதை விட்டு விட்டு 100 கிலோ மீட்டர் அப்பால் உள்ள அதிக செலவு செய்து பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தில் இருந்து தண்ணீர் கொண்டு செல்வதற்கு திட்டம் தீட்டி யுள்ளது எவ்வகையிலும் பயனற்றதும். மிகவும் பற்றாக்குறை நீருள்ள பிஏபி திட்டதிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் எடுப்பது வீண் செலவாக அமை யும் என்பதையும் தெரிவித்துக் கொள்கி றோம்.
எனவே, பரம்பிக்குளம் ஆழியார் திட் டத்திலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட் டத்தை ரத்து செய்யுமாறும், மிகவும் அரு கில் உள்ள ஆறுகளில் இருந்து குறைந்த செலவில் திட்டத்தை நிறைவேற்றுமாறு, கோவை - திருப்பூர் மாவட்டங்களின் விவசாயிகள் சார்பிலும், எங்கள் சங்கத்தின் சார்பிலும் கேட்டுக்கொள் கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.