உதகை, ஜூன் 21- உயிரிழந்த நண்பர்களின் நினைவு நாளில் நண்பர்கள் ஒன்றினைந்து ரத்த தான முகாம் நடத்தப்பட்ட சம்பவம் ஊட்டியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தி யது. நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேர்ந்தவர் தாஜுதீன். இவர் ஊட்டியில் 17 வருடங்களாக ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டி வருகிறார். பொதுநல சேவையில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், பல் வேறு தன்னார்வப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய மகனும் ஆம்பு லன்ஸ் ஓட்டுநரான தமீம் மற்றும் அவருடைய நண்பர் ஜஸ்டின் ஆகி யோர் நண்பர்களுடன் திருச்சி மாவட் டம், துறையூருக்கு சென்றனர். அங் குள்ள பச்சமலை அருவியில் குளிக்க சென்ற போது, எதிர்பாராதவிதமாக தமீம் மற்றும் ஜஸ்டின் நீரில் மூழ்கி இறந்து விட்டனர். அவர்கள் இருவரின் நினை வாக ஊட்டியில் உள்ள அவர்களது நண்பர்கள் சார்பில் ரத்ததான முகாம் நடத்த திட்டமிட்டனர். இதன்படி ஊட்டியில் உள்ள தனி யார் மண்டபத்தில் ரத்ததான முகாம் புதனன்று நடைபெற்றது. இம்முகாமை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் பிரபாகர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதைத்தொ டர்ந்து, இந்த முகாமில் சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இப்பணியில் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் கலந்து கொண்ட னர். இதுகுறித்து ரத்ததான முகாம் ஏற் பாளர்கள் கூறுகையில், உயிரிழந்த தமீம் மற்றும் ஜஸ்டின் பெரிய அளவில் ரத்த தான முகாம் நடத்த வேண்டும் திட்ட மிட்டு இருந்தார்கள். ஆனால், அதற்குள் எதிர்பாராத விதமாக அவர்கள் உயிரி ழந்து விட்டனர். அவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. உயிரிழந்த இளைஞர்களின் பெயரில் தனி அறக் கட்டளை ஏற்படுத்தி அதன் மூலம் மாதந் தோறும் ரத்த தான முகாம், மருத்துவ முகாம், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்டவை கள் மேற்கொள்ளப்பட உள்ளது, இதன் முதற்கட்டமாக புதனன்று முதல் கட்ட மாக 50 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு உள்ளது, என்றனர்.