திருப்பூர், பிப்.27- திருப்பூர் அனுப்பர்பா ளையத்தில் உள்ள கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் 30 நாட்க ளுக்கு முழு நேரப் பயிற்சி அளிக்கப்படும். பிப்ரவரி 28 அன்று பயிற்சி தொடங்கும். எழுத படிக்கத் தெரிந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட இரு பாலரும் விண்ணப்பிக் கலாம். பயிற்சிக் கட்டணம் கிடையாது. மதிய உணவு, காலை, மாலை தேநீர் வழங் கப்படும். பயிற்சியின் முடி வில் மத்திய அரசின் ஸ்கில் இண்டியா சான்றிதழ் வழங் கப்படும். கனரா வங்கி கிரா மப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், அனுப்பர்பாளையம் புதூர், அவிநாசி சாலை, திருப்பூர் - 641 652 என்ற முகவரிக்கு நேரில் வர வேண்டும். முத லில் வருவோருக்கு முன்னு ரிமை வழங்கப்படும். மேல் விபரங்களுக்கு 99525 18441, 98904 43923, 86105 33436 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். ஆன்லைன் முன்பதிவிற்கு http://tinyu rl.com/4z2274t6 என்ற இணைப்பில் தொடர்பு கொள்ளுமாறு பயிற்சி நிலைய இயக்குநர் ஜே.பூப திராஜா கூறியுள்ளார்.