districts

இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பூர், ஜூன் 21 – தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜூன் 24ஆம் தேதி காங்கே யம் மற்றும் மூலனூரில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ  முகாம் நடத்தப்படுகிறது. காங்கேயத்தில் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற் றும் மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இம்முகாமை நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான ஆயத்தப் பணிகள் நடை பெற்று வருகின்றன. ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரி சோதனை, எக்கோ மற்றும் இசிஜி, பெண்களுக்கான மார் பக புற்று நோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்று நோய் கண்டறி யும் பரிசோதனை, முழு இரத்த பரிசோதனைகள், பொது மருத் துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண்,  காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத் துவம், மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பல்நோக்கு மருத்துவ  ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் காலை 8 மணி  முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட உள்ளது. சித்த மருத்துவம் மற்றும் ஆயர்வேத சிகிச்சை ஆலோச னைகளும் வழங்கப்பட உள்ளது. இந்த சிறப்பு மருத்துவ முகா மில் அரசு மருத்துவ காப்பீட்டில் பங்குதாரர்களான தனியார்  மருத்துவமனைகளும் பங்கேற்க உள்ளனர். முதலமைச் சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மாவட்ட அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனை, தாலூக்கா அரசு மருத்துவமனை  மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் தேவையான மேல் சிகிச்சைகள் அளிக்கப்படும். தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் இம்முகாமில் சிறப்பு கவ னம் செலுத்தப்படுகிறது. இம்முகாமை சிறப்பாக நடத்துவது தொடர்பாக மாவட்ட  ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் செவ்வாயன்று அதி காரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.