districts

img

பூசாரியிடம் லட்சக்கணக்கில் மோசடி

மே.பாளையம், ஜன.11- கோவில் பூசாரியிடம் தொழிலில் முத லீடு செய்வதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பெள்ளாதி பகுதி யைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் அங் குள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் பூசாரி யாக உள்ளார். இவர் கடந்த சில மாதங் களுக்கு முன்பு, இவருக்கு கோவை வீர பாண்டி பகுதியைச் சேர்ந்த சிவா என்பவ ருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சிவா, பூசாரி முருகேசனிடம் தான் ஒரு பிரபல டிராவல்ஸ் கம்பெனியில் மேலாளராக உள்ளதாகவும், சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு விட்டு  வருவதாகவும் கூறியதாக தெரிகிறது. மேலும், முருகேசனிடமும் முதலீடு செய் தால் மாதம் 45,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி யுள்ளார். இதனை நம்பிய பூசாரி முருகேசன் 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை சிவா விடம் கொடுத்துள்ளார். பணம் கொடுத்த பின் இரண்டு மாதங்கள் ரூ. 45,000 வழங்கிய சிவா, அதன் பின் தலைமறைவாகியுள்ளார். இதைத்தொடர்ந்து, தான் ஏமாற்றபட்டதை உணர்ந்த முருகேசன் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீ சார், கோவையில் பதுங்கி இருந்த சிவாவை  கைது செய்து, சிறையில் அடைத்தனர்.