districts

img

ரூ.20 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு அடிக்கல்

இளம்பிள்ளை, டிச.12- பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சியில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டு வதற்கான பணிகளை மக்களவை உறுப்பி னர் எஸ்.ஆர்.பார்த்திபன் தொடங்கி வைத் தார்.  சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறையின் நிதியி லிருந்து ரூ.20 லட்சம் மதிப்பில், துணை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும்  எம்.ஜி.ஆர் நகர் சலவைத் தொழிலாளர் கால னியில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயி றன்று நடைபெற்றது. இப்பணிகளை மக்க ளவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவ லிங்கம், வீரபாண்டி ஒன்றிய செயலா ளர் வெண்ணிலா சேகர், பெருமாகவுண்டம் பட்டி ஊராட்சி தலைவர் பிரேமலதா சதீஷ் குமார், ஊராட்சி செயலாளர் பிரபாகரன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.