அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அமைப்பு தினம் திங்களன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம், கணபதி, பீளமேடு, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் மாதர் சங்க கிளைகளில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில், மாவட்டத் தலைவர் ஜோதிமணி, பொருளாளர் உஷா, மாநிலக் குழு உறுப்பினர் ராஜலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.