ஈரோடு, மார்ச் 10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் டி.பி.முத்துசாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்தவர் தோழர் டி.பி. முத்துசாமி. ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து களப்பணியாற்றியவர். அவரது 34 ஆண்டு நினைவு தினம் ஈரோடு தாலுகா கமிட்டி சார்பில் வெள்ளியன்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிர மணி தலைமை வகித்தார். மூத்த தோழர் கே.துரைராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிச்சாமி, சி. முருகேசன், ஆர்.விஜயராகவன் உள்ளிட்ட திராளனோர் பங்கேற்றனர்.