சேலம், டிச.25- அரசு வேலை வாங்கித் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த எடப்பாடி பழனிச்சாமி உதவியாளரின் நண்பர் கைது செய்யப் பட்டார். எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில் அவ ரின் தனிப்பிரிவு உதவியாளராக இருந்த வர் மணி. இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்று கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவ லகத்திற்கு அடுத்தடுத்து புகார்கள் வந் தது. இந்நிலையில், நெய்வேலி மாவட்டத் தைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் மின் சாரத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 17 லட்சம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி விட்டதாக அளித்த புகாரின் பேரில் சேலம் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் எடப்பாடி பழனிச்சாமி யின் உதவியாளர் மணி மற்றும் மணியின் நண்பர் செல்வகுமார் ஆகியோர் மீது வழக் குப்பதிவு செய்தனர். இதையடுத்து தலைமறைவான இரு வரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தலை மறைவாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி யின் உதவியாளர் மணி அவரது சொந்த ஊரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து 3 மாதங் களாக தலைமறைவாக இருந்த மணியின் நெருங்கிய நண்பர் செல்வகுமாரை கொண்டலாம்பட்டியில் வைத்து தனிப் படை போலீசார் சனியன்று கைது செய்த னர்.