நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டத்தில் வன உரிமை சட்டம் செயல்பாடுகள் மற் றும் செயலாக்கம் தொடர்பாக உதகையிலுள்ள தமிழக அரசினர் மாளிகையில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி நாடாளு மன்ற உறுப்பினர் ஆ.ராசா, மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் கலந்து கொண்ட னர். இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.