உடுமலை, பிப். 3- விளைநிலங்களில் காட்டு விலங் குகள் சேதப்படுத்துவதை தடுக்கும் வகையில் மலை அடிவாரப்பகுதியில் சோலார் மின்வேலி மற்றும் அகலி அமைக்க வேண்டும் என்ற விவசா யிகளின் கோரிக்கையை நடைமு றைப்படுத்தும் வகையில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மலைப்பகுதியான திரு மூர்த்தி மலை அருகே உள்ள பொன் னால் அம்மன் சோலை பகுதி உள்ளது. இப்பகுதியில் மழைகாலத்தில் தண் ணீரை சேமிக்கும் வகையில் பொன்னா லம்மன் கோவில் அருகில் புதிதாக தடுப்பணை அமைப்பது, வலை யபாளையம் கிராமத்தில் காட்டு விலங் குகளுக்கு வனத்துக்குள் தடுப்பணை கட்ட வேண்டிய இடங்களை ஆய்வு செய்தனர். பின்னர் காட்டு விலங்குகள் வனத்தை விட்டு வெளியே வராதவகையில் வனத்துறையினரால் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக் கபட்ட சோலார் மின்சார வேலியை புதுப் பிக்கவும் வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியே வராத வகையில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்கள். இது குறித்து அப்பகு விவசாயிகள் கூறுகையில், விவசாய பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும் என்கிற விவசா யிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று, வனத்துறை அதிகாரிகள் இந்த ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இத்தகைய ஆய்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந் தாலும், அவற்றை விரைவில் நடை முறை படுத்துவதிலும் முனைப்பு காட்ட வேண்டும் என்றனர்.