districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

புளியங்கண்டியில் சிறுத்தை நடமாட்டம்? கேமிரா மூலம் வனத்துறை கண்காணிப்பு

பொள்ளாச்சி, ஜூலை 02- பொள்ளாச்சி அடுத்த புளியங்கண்டி பகுதியில் உள்ள தென்னை தோட்டத்தில்   மர்மமான முறையில் நாய் ஒன்று  இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து  வனத்துறையினர் கண்காணிப்பு காமிராக் கள் மூலமாக கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரபடுத்தி யுள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த புளியங் கண்டி பகுதியில்   தனியார் தோட்டத்தில் கட்டிவைத்துள்ள  நாய் ஒன்று மர்ம மான முறையில் இறந்துகிடந்தது. இதுகுறித்து தோட்டத்தின் உரிமையாளர் ரவி என்பவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன்பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி வனச்சரக வனத்துறையினர் ரவி என்பவரின்  தென்னை  தோட்டத்தில்  மர்ம விலங்கு நடமாட்டம்  குறித்து  கண்டறிய நான்கு  கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி யுள்ளனனர். இப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருக்க லாம் என வனத்துறையினர் சந்தேகித்துள்ளனர். காமிராக்க ளில் பதிவாகும் காட்சிகளின்  அடிப்படையில் அடுத்தகட்ட    நட வடிக்கை எடுக்கப்படுமென வனத்துறையினர் தெரிவித்துள் ளனர். மேலும் இரவு நேரங்களில் இப்பகுதிகளில் யாரும் தனி யாக வரவேண்டாம்,என அப்பகுதி மக்களுக்கு வனத்துறை யினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாலிபர் தற்கொலை முயற்சி 

சேலம், ஜூலை 02-  தனது அலைபேசியை மீட்டு தர கோரி வாலிபர்  ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தற் கொலை முயற்சியில் ஈடு பட்ட சம்பவம் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.  சேலம் குறிஞ்சி நகர் ஹவு சிங் போர்டு பகுதியை சேர் ந்தவர் பிரகாஷ். புதிய பேருந்து நிலையம் அருகே வந்த போது திருநங்ககை ஒருவர், அவரின் செல் போனை பறித்துக் கொண்ட தாக கூறப்படுகிறது. இந்நிலையில், செல் போனை மீட்டு தரகோரி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகே கையில் பிளே டால் கீறிக்கொண்டு தற் கொலை முயற்சியில் ஈடுபட் டார்.

பாறை‌கடத்தலை தடுத்த அரசு அதிகாரிக்கு மிரட்டல் அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 18 பேர் மீது வழக்கு

தருமபுரி, ஜூலை 02- அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த மலை குன்று மற்றும் பாறை களை நள்ளிரவில் உடைத்த வாக னத்தை அதிகாரிகள் பறிமுதல் செய் தனர்.  இந்த  வாகனத்தை கொண்டு செல்லாமல் தடுத்து, அதிகாரிகளை மிரட்டிய அதிமுக பிரமுகர்கள் மற் றும் நான்கு பெண்கள் உட்பட 18 பேர்  மீது போலீசார் வழக்கு பதிவு செய் துள்ளனர். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம்  ஒன்றியம் அனுமந்தபுரம் பஞ்சா யத்து திரௌபதி அம்மன் கோவில் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த பெரிய பாறை மற் றும் மலை குன்றுகள்‌உள்ளன.  அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அதிமுக பிரமுகர் முருகானந்தம் மற் றும் சிலர் நள்ளிரவில் டாட்டா ஹிட் டாச்சி வாகனம் மூலம் பாறை மற்றும் குன்றுகளை உடைத்துக் கொண்டு இருந்தனர். இது குறித்த தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் மணி,  கிராம நிர்வாக அலுவலர்  சத்யராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பாறைகளை உடைப்பதை தடுத்து நிறுத்தி உள்ளனர். அப் போது டாடா ஹிட்டாச்சி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். சம்பந்தப்பட்ட ஹிட்டாச்சி வாகனத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் எடுத்துச் செல்ல முற்பட்டபோது அதிமுகவைச் சேர்ந்த முருகானந்தம் தலைமை யில் வந்த கும்பல் அதிகாரிகளை தரக் குறைவாக திட்டினர். மேலும், வாக னத்தை எடுத்து செல்லாத வகையில் தடுத்து நிறுத்தினர்.  இது குறித்து காரிமங்கலம் போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்பு டன் வாகனத்தை பறிமுதல் செய்து  காரிமங்கலம் காவல்நிலையத்தில்  ஒப்படைத்தனர். இது குறித்து விஏஓ சத்யராஜ்  கொடுத்த புகாரின் பேரில், அதிமுக வைச் சேர்ந்த முருகானந்தம், அனு மந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா,  பார்வதி, மங்கம்மாள், முனியம் மாள், மூர்த்தி மாரிமுத்து, ராஜேஷ், மணிகண்டன் பூபாலன் திருப்பதி, குணசேகரன், மாதேஷ் சின்னசாமி முரளி சரவணன் துரைராஜ் உட்பட 18 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் வழக்கில் சம்மந்தப்பட்டு  தலைமறைவாகியுள்ள அனைவரை யும் போலிசார் தேடி வருகின்றனர். இதில் புகாருக்கு உள்ளான அதிமு கவைச் சேர்ந்த முருகானந்தம் மீது  ஏற்கனவே மூன்று புகார்கள் நிலுவை யில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக மறுசுழற்சி தின விழிப்புணர்வு

அவிநாசி, ஜூலை 2- உலக மறுசுழற்சி தினத்தை ஒட்டி, அவிநாசி அரசு பள்ளி  மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அவிநாசி பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு  பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவிநாசி கைகாட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் பயிலும் மாணவர் கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச் சிக்கு அவிநாசி பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்கு மார் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் செந்தா மரைக்கண்ணன் ஆகியோர் பேசினர். இதில் நாம் வசிக் கும் இப் பூமியை நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்ற  தலைப்பில் பூமிக்கு பெரும் கேடு விளைவிக்கும் நெகிழியை  எவ்வாறு ஒழிப்பது, மக்கும் குப்பை, மக்காத குப்பை என் பது என்ன, குப்பைகளை எவ்வாறு மறுசுழற்ச்சி செய்வது,  அவிநாசி சுகாதார தூய்மை பணியாளர்கள் தாங்கள் எவ்வாறு  குப்பைகளை மேலாண்மை செய்து உரமாகவும், மண் புழு  உரமாகவும் மாற்றுகிறார்கள் என்று விளக்கப்பட்டது. நிறை வாக நெகிழி பைகளை பயன்படுத்த மாட்டோம்,  குப்பைகளை  தரம் பிரித்து தருவோம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்ட னர். பொறுப்பாளர் ஜீவானந்தம் நன்றி தெரிவித்தார்.

வீடு புகுந்து திருட முயன்ற மூன்று பேர் கைது

திருப்பூர், ஜூலை 2- காமநாயக்கன்பாளையம் அருகே உள்ள காங்கேயம்பா ளையத்தை சேர்ந்தவர் சம்பத்குமார் (40). இவரது மனைவி  கலையரசி (38). கடந்த 30ஆம் தேதி, சம்பத்குமார் தனது  மகனுடன் அந்தப் பகுதியில் உள்ள கோயிலுக்கு சாமி  கும்பிட சென்றார். வீட்டில் கலையரசி மட்டும் தனியாக இருந் தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் 3 பேர் வீட்டில் இருந்த தங்கச்சங்கிலி மற்றும் பணத்தை  திருட முயன்றனர். இதனால் கலையரசி கூச்சலிட்டார். இதைத்  தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். இதனி டையே மூவரும் தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து  சம்பத்குமார், காமநாயக்கன்பாளையம் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேற்குவங்கத்தை சேர்ந்த, ராஜு பாஸ்வான் (30), பந்தெப் பக்டி (32), பாபன்  யுவானா (21) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்த னர்.

ஊத்துக்குளியில் தம்பதி மீது தாக்குதல் 3 பேர் கைது

திருப்பூர், ஜூலை 2– ஊத்துக்குளி அருகே உள்ள முதலிபாளையத்தை சேர்ந்த வர் வடிவேல் (42). இவரது மனைவி சித்திரைச்செல்வி (39).  சித்திரைச்செல்வியின் அக்கா மகள் செல்வி (28). இவரது கண வர் தினேஷ் (30).  இவர்களுக்கிடையே குடும்பத் தகராறு  இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி குடும்பப்  பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வடிவேல், தினேஷை அழைத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து, வடி வேல் மற்றும் சித்திரைச்செல்வியைத் தாக்கி, கொலை மிரட் டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வடிவேல் ஊத்துக்குளி போலீஸா ரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, தினேஷ், அவரது நண்பர்கள் ரஞ்சித் (26), சந்தோஷ்  (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

காங்கேயத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூர், ஜூலை 2– திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில்  மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில்  மாநில அமைச்சர்கள் ஆறு பேர் பங் கேற்று முகாமைத் தொடங்கி வைத்து பணி நியமன ஆணை வழங்கினர். காங்கயம் திருச்சி சாலையில் உள்ள  தனியார் திருமண மண்டபத்தில் சனி யன்று திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு  மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வா தார இயக்கம் இணைந்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தின. இதில் படித்த வேலைவாய்ப்பற்ற ஆண்  மற்றும் பெண் இருபாலருக்கும் வேலை வாய்ப்பு வழங்க 200-க்கும் மேற்பட்ட பல் வேறு முன்னணி தனியார் துறை நிறுவ னங்கள் பங்கேற்றன. தங்கள் நிறுவன ங்களுக்கு ஆட்களை தேர்வு செய்த னர். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச் சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், உணவுப்பொருள் வழங் கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி,  சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளி நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்  செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தொழிலா ளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன்,  ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்  என். கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி  வைத்து, வேலைவாய்ப்பு முகாமில்  தேர்வானவர்களுக்கு பணி நியமன  ஆணைகளை வழங்கினர். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வீரராகவராவ், மாவட்ட ஆட்சியர் சு.வீனித் மற்றும்  மாநிலங்களவை உறுப்பினர் பி. செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். அமைச்சர்கள் இம்முகாம் குறித்து பேசினர். இதையடுத்து தேர்வு செய் யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.  இம்முகாமில் வருகை புரிந்தோர் எண்ணிக்கை மொத்தம் 11ஆயிரத்து 306  பேர், தனியார் துறை வேலைவாய்ப் புக்கு தேர்வானவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 401 பேர், இரண்டாம் கட்ட  தேர்வுக்கு தகுதி பெற்றோர் 559 பேர்,  என இந்த வேலைவாய்ப்பு முகாமில் 2 ஆயிரத்து 960 பேர் தேர்வு பெற்றனர். திறன் மேம்பாட்டு பயிற்சியில் தேர்வு பெற்றோர் 260 பேர், வெளிநாட்டு வேலைக்கு தேர்வு பெற்றவர் 187 என மாவட்ட நிர்வாக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பழுதான குப்பை வாகனங்கள் சீரமைப்பு

திருப்பூர், ஜூலை 2- மாநகராட்சி 2ஆவது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிக ளில் பழுதான மற்றும் குப்பை வாகனங்கள் கணக்கம்பாளை யத்தில் உள்ள பணிமனையில் இருந்தன. இதில் 15 வாக னங்களுக்கு வெல்டிங் வேலை மற்றும் 40 வாகனங்களுக்கு சக்கரங்கள் பழுது நீக்கும் பணி நடைபெற இருக்கிறது. இதனை மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி ஆய்வு  செய்தார்.

குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது

திருப்பூர், ஜூலை 2- பெருமாநல்லூர் பகுதி யில் நடைபயிற்சி மேற் கொண்ட வேல்முருகன் என் பவரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற  தினேஷ்குமார் (24), ஈஸ்வ ரன் (38), முத்துக்குமார் (29),  சரவணன் (22) மற்றும் தேவா  (23) ஆகியோர் குண்டர் சட் டத்தில் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்ட னர்.

உடுமலைக்கு கூடுதல் ரயில்களை  இயக்க ரயில் பயணிகள் குழு கோரிக்கை

உடுமலை, ஜூலை 2-  உடுமலை ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டி யும்  மேலும் ரயில் நிலையத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் நவீன  படுத்த வேண்டும் என்று கடந்த வாரம்  பொது மக்களிடம் உடுமலை ரயில்  பயணிகள் குழு சார்பில் கையெழுத்து  இயக்கம் நடத்தப்பட்டது. இதைதொ டர்ந்து பல்வேறு கோரிக்கைகள் அடங் கிய மனு மதுரை மண்டல அலுவகத்தில்  தரப்பட்டது. மதுரை மண்டல அலுவலகத்தில் மண்டல மேலாளர்  ப. அனந்த்  மற்றும்  மண்டல முதுநிலை வணிக மேலாளர்  அவர்களிடம் உடுமலை ரயில் பயணி கள் குழுவின் சார்பில் உடுமலை சண்மு கசுந்தரம், கோவை ஜெயராஜ் ஆகி யோர் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது.  திருச்செந்தூர் செல்லும் ரயிலில்  கூடுதல் பெட்டிகள் இணைக்க  வேண் டும்.அமிர்தா விரைவு ரயில் திண்டுக்கல்  ரயில் நிலையத்திற்கு 7 மணி 45 நிமிடங்க ளுக்கு சென்றால் வைகை எக்ஸ்பிரஸ் மற்றும் திருச்சி- திருவனந்தபுரம் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களை உடுமலை, பழனி மக்கள் பயன்படுத்த ஏதுவாக இருக்கும். மேலும் திருச்சி வழியாக கோவை- பொள்ளாச்சி- பழனி - சென்னை-( எழும்பூர் ரயில்  நிலையம்) செல்ல வாராந்திர ரயில்  இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தினமும்  அதிகாலை 4.30 மணிக்கு திண் டுக்கலில் இருந்து புறப்பட்டு பழனி, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு காலை 8.30  மணிக்கு சென்றடையும் வண்ணம் ரயில் இயக்க வேண்டும் இத னால் தினமும் உடுமலை மற்றும் அதன்  சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயி ரகனக்கான பொதுமக்கள் மற்றும் கல் லூரி மாணவ மாணவியர்கள் பயன் பெருவார்கள்.பல ஆண்டு கால கோரிக் கையாக உடுமலையில் சரக்கு (Goods  shed/ Yard) கையாளும் வசதி ஏற்ப டுத்த வேண்டும் . கோவையிலிருந்து (போத்தனூர்/மேட்டுப்பாளையம்) திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமேஸ்வ ரம் ரயில்கள் இயக்க வேண்டும், மதுரை-  பழனி, பழனி- கோவை, கோவை- பழனி,  பழனி- மதுரை என்று இரு வேறு ரயில்க ளாக இயக்கப்படும் கோவை- பழனி- மதுரை இன்டர்சிட்டி ரயிலை ஒரே எண் ணில் இயக்கி இணையதளத்தில் பய ணச்சீட்டு பதிவு பெறும் வசதியை செய்து தர வேண்டும்.உடுமலை ரயில்  நிலையத்திற்கு பயணிகள் நலன் கருதி  மேலும் ஒரு பயணச்சீட்டு விநியோகிக் கும் Ticket Booking counter திறக்க வேண்டும் மேலும் திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் மேலும் சில மாதங்களுக்கு நீட் டிப்பு செய்ய வேண்டும் . குறிப்பாக  இந்த  ரயிலில் பயண கட்டணத்தை குறைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  உடுமலை ரயில் பயணிகள் குழுவின்  சார்பில் பொது மக்களிடம் கையெ ழுத்து பெறபட்ட கோரிக்கை மனு தரப் பட்டது.

ரூ.1.30 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

சேலம், ஜூலை 2- தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.1.30 லட்சம் மதிப் பிலான 25 கிலோ ஹான்ஸ், குட்கா பொருட்களை போலி சார் பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட  ஹான்ஸ் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனையை தடுக்க பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில  தினங்களுக்கு முன்பு சேலம் மாநகர காவல் ஆணையா ளர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கள் மற்றும் காவல் துறையினர் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் தடை செய் யப்பட்ட ஹான்ஸ் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பது  குறித்து காவல்துறையுடன் இணைந்து உணவு பாதுகாப்பு  துறை அதிகாரிகள் சோதனை நடத்த முடிவெடுக்கப்பட்டது.  அதன் அடிப்படையில் சனியன்று சேலம் மாநகரம் தாத காப்பட்டி பகுதியில் காவல் உதவி ஆணையாளர் அசோகன், அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் சந்திரகலா உள்ளிட்ட  காவல்துறையினரும், உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர் களும் சோதனை மேற்கொண்டனர். அப்போது மகேந்திர குமார் என்பவருக்கு சொந்தமான முருகன் டிரேடர்ஸ் மொத்த விற்பனை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா ஆகியவை மூட்டைகளில் பதுக்கி வைக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 25 கிலோ எடை கொண்ட இந்த குட்கா பொருட்களின் மதிப்பு ரூ,1.30 லட்சம் இருக்கும் என போலிசார் தெரிவித்தனர். தொடர்ந்து கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், தலை மறைவான கடையின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

சிறந்த மருத்துவர்களுக்கான விருது

தருமபுரி. ஜூலை. 2- தருமபுரி மாவட்ட   ஆட்சி யர் அலுவலகத்தில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப் பீட்டுத் திட்டம் மற்றும் ஆயுஷ் மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய  தருமபுரி அரசு மருத்துவமனையின்  காது கேளாதோருக்கான சிறப்பு மருத்தவர் எஸ்.செந் தில்குமரன் மற்றும் தருமபுரி டி.என்.வி.ஆர்த்தோகேர் மருத்துவமனையின் எலும்பு முறிவு தண்டுவடம், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் எஸ்.புஷ்பசேகர் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி விருது வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் அரசு  தருமபுரி மருத்துவக்கல் லூரி மருத்துவமனை முதல் வர் மருத்துவர் அமுதவல்லி, இணை இயக்குநர் நலப்ப ணிகள் (பொ) மருத்துவர் சி. ராஜேஷ் கண்ணன், அரசு தரு மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப் பாளர் மரு.சிவக்குமார் உட் பட மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஹோட்டல் செலவு 70 லட்சம்தானாம்...

முன்னாள் முதல்வர் உத் தவ் தாக்கரேவுக்கு எதிராக  போர்க்கொடி தூக்கிய சிவ சேனாவின் அதிருப்தி எம்எல் ஏக்கள் உள்ள ‘ரேடிசன் புளூ’  சொகுசு ஹோட்டலில் 70 அறைகளைப் புக் செய்து தங்கியிருந்தனர். கோடி கண க்கான ரூபாய் செலவான நிலையில் இதற்கு ரூ.70 லட்சம் மட்டும் செலவனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.