அவிநாசி, டிச.1- அவிநாசியை அடுத்து போத்தம்பாளை யத்தில் சிறுத்தை நடமாடுவதாகத் தெரியவந் ததையடுத்து, வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அவிநாசியை அடுத்து போத்தம்பாளை யத்தில் சென்னியப்பன் காட்டுப்பாறை என்ற இடத்தில் வெள்ளியன்று வளர்மதி என்பவர் இரு சிறுத்தைகளைப் பார்த்துள்ளார். இருசக் கர வாகனத்தில் வரும் போது நாயைத் துரத்தி வந்த சிறுத்தைகள் இரண்டும் வண்டியை பார்த்ததும் சோளக் காட்டிற்குள் புகுந்து ஓடி விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து சம் பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வனச்சரக அலு வலர், வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்ற னர். சோளக் காட்டில் சில காலடித்தடங் களை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்ப வம் காட்டுத்தீ போல் பரவி அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் கூடினர். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த பகுதிக்கு அருகில் உள்ள பாப் பாங்குளம் பகுதியில் ஒரு சிறுத்தை இருவரை தாக்கியது குறிப்பிடத்தக்கது.