districts

img

ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, நவ.22- தஞ்சையில் ஆசிரியை ரமணி படுகொலை செய்யப் பட்டதை கண்டித்து கோவை யில் டிட்டோ - ஜேக் சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கோவை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத் தில் நடைபெற்ற போராட்டத்திற்கு, ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். தமிழக ஆசிரியர் கூட் டணி மாவட்ட செயலாளர் எம்.ராஜசேகரன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட் டச் செயலாளர் வீ.அரசு, தமிழக ஆசிரியர் கூட்டணி  மாவட்டத் தலைவர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆசிரியர் களுக்கு பணிப்பாதுகாப்புச் சட்டத்தை ஏற்ப டுத்த வேண்டும். ஆசிரியர் ரமணி குடும்பத் தாருக்கு உரிய இழப்பீட்டினை முதலமைச் சர் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில  துணை செயலாளர் தங்கபாஸ், தமிழக ஆசி ரியர் கூட்டணி மாநில துணைச்செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் நிறைவுரை யாற்றினர்.