நாமக்கல், ஜன. 30- கரும்பு அதிக மகசூலுக்கு, தமிழக அரசு பரிசு அறிவித் ததை தொடர்ந்து, வேளாண் அதிகாரிகள் குமாரபாளையம் அருகே கரும்பு தோட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர். விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக ஒரு ஏக்கர் நிலத்தில் அதிக மகசூல் செய்யும் விவசாயிக்கு முதல் பரி சாக ரூ. 2.5 லட்சம் பரிசு என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் வேளாண்துறை அதிகாரிகள் மாநி லம் முழுவதும், இது தொடர்பாக ஆய்வு செய்து வருகி றார்கள். அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்ட வேளாண் அதிகாரிகள் குமாரபாளையம் அருகே உள்ள சீராம்பாளை யம் பகுதியில் பழனியப்பன் என்பவரது கரும்பு தோட்டத் தில் ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, ஈரோடு வேளாண்மை துறை இணை இயக்குனர் வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பேசிய போது, விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக சிறு தானி யம், எண்ணை வித்துக்கள், கரும்பு உள்ளிட்ட 11 பயிர்க ளுக்கு ஊக்கப்பரிசு வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக அறுவடை பரிசோதனை நடந்து வருகிறது. இதில் முதல் பரிசாக, 2.5 லட்சம் ரூபாய், இரண்டாவது பரிசாக 1.5 லட்சம் ரூபாய், மூன்றாவது பரிசாக ஒரு லட்சம் ரூபாய் அறிவித் துள்ளது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் நடை பெறும், மாநில அளவிலான கரும்பு அறுவடையில் வேளாண் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் ஒரு ஏக்கர் மகசூல் கணக்கிடப்பட்டது. பிற மாவட்டங்களில் இந்த அறுவடை நிறைவு பெற்று, அரசின் பரிசீலனைக்கு பின் பரிசுகள் வழங் கப்படும் என்றார்.