கோவை ஆக.18- குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7650 வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண் டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7650 வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி உண வுத் திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழி யர்கள் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் ஒன் றிய தலைவர் சுசீலா தலைமை வகித் தார். மாவட்ட பொருளாளர் சுதா கோரிக்கை களை விளக்கி உரையாற்றினார். சத்து ணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.பி.பழனிச்சாமி சிறப்புரையாற் றினார். முடிவில் ஒன்றியப் பொருளாளர் சாந்தி நன்றி கூறினார். இதில், 30க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர். இதேபோன்று பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சத்துணவு ஊழி யர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் கே.ருக்கு மணி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலா ளர் ஜோதிமணி வரவேற்றார். துணைச்செய லாளர் கே.தனலட்சுமி துவக்கவுரையாற்றி னார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜெகநாதன் சிறப்புரையாற்றினார். முடிவில், ஒன்றியப் பொருளாளர் கீதா நன்றி கூறினார்.