districts

img

தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

தருமபுரி, பிப்.19-  தருமபுரி மாவட்டத்தில் உணவு பாது காப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி காலாவதியான பொருட்களை விற் பனை செய்தவர்களுக்கு அபராதம் விதித்த னர். தருமபுரி மாவட்டத்தில் பஞ்சப்பள்ளி மற் றும் கொரவாண்டள்ளி குடிநீர் சுத்திகரிப்பு தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பாலக் கோடு, மாரண்டள்ளி பெரியாம்பட்டி, காரி மங்கலம் பகுதிகளில் உள்ள குளிர்பான மொத்த விற்பனை நிலையங்கள் பேக்கரி கள், பழக்கடைகள், பெட்டி கடைகள் உள் ளிட்டவற்றில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா தலைமையில் திடீர் ஆய்வு செய் தார். முன்னதாக, குடிநீர் கேன்கள், பாட்டில் கள் உரிய முறையில் தேதி குறிப்படாமலும், குளிர்பானங்கள் காலாவதியானவை விற் கப்படுவதாகவும் தருமபுரி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார் வந் தன. அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட  ஆட்சியர் திவ்யதர்சினி உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் காரிமங்கலம், பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள் ளிட்ட குழுவினர் இந்த ஆய்வை மேற் கொண்டனர். இதில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங் களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சில  குறைபாடுகள் காணப்பட்டது. குறிப்பாக, தேதி குறிப்பிடப்படாத கேன்கள், பாட்டில் கள் பறிமுதல் செய்யப்பட்டது. சில கடை களில் காலாவதியான குளிர்பானங்கள் பறி முதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் உரிய தயாரிப்பு தேதி இல்லாத திண்பண் டங்களும் பறிமுதல் செய்து எச்சரித்து எச்ச ரிக்கை நோட்டீஸ் மற்றும் அபாரதம் விதிக் கப்பட்டது. இது போன்ற ஆய்வுகள் தொடர்ச் சியாக நடைபெறும் என மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்தார்.