districts

img

கனமழையால் அமராவதி மற்றும் திருமூர்த்திமலையில் வெள்ளப்பெருக்கு

உடுமலை, ஜன.9- உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாயன்று காலை  முதல் பெய்த கனமழையால் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் காட் டாற்று வெள்ளம் ஏற்பட்டது. மேலும்,  அமராவதி அணையும் முழு கொள் ளவை எட்டியதால் அணையில் இருந்து  உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறையினர் அறி வுறுத்தியுள்ளனர். அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதி களான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகு திகளில்  மழை தீவிரமடைந்துள்ளதால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியுள் ளது. கடந்த இரண்டு தினங்களாகக் கேர ளாவிலுள்ள மூணாறு, தலையாறு, மறையூர் பகுதியில் கனமழை பெய்து  அணையின் பிரதான நீர்வரத்து ஆறான  பாம்பாற்றின் மூலம் அணைக்கு நீர்வ ரத்து அதிகரித்தது. செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி அணைநீர்மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 89.24 அடி யாக உயர்ந்தது. மேலும், அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 4400 கன அடியாக வும், உபரிநீர் ஆற்றில் 5400 கன அடி திறக் கப்பட்டுள்ளது. நீர் வரத்தை கணக்கில்  கொண்டு தண்ணீர் திறப்பு இருக்கும்  என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள்  தெரிவித்தனர். திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அரு வியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட் டுள்ளதை தொடர்ந்து, மலை அடிவாரப் பகுதியில் இருக்கும் அமணலிங்கேஸ் வரர் கோவில் பகுதியில் வெள்ள நீர்  சூழ்ந்து உள்ளது. அதே போல் பொன் னாலம்மன் சோலை பாலாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.