திருப்பூர், ஜன.12- திருப்பூரில், கொடி காத்த குமரனின் 93 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது. இந்திய சுதந்திர போராட்ட தியாகி குமரனின் 93 ஆம் ஆண்டு நினைவு தினத் தன்று, திருப்பூர் வடக்கு காவல் நிலையம் எதி ரில், குமரன் தடியால் தாக்கப்பட்டு வீழ்த்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது நினைவுத்தூண் முன்பாக அஞ்சலி செலுத் தும் நிகழ்வு நடைபெற்றது. சுதந்திர போராட்ட தியாகிகள் சமிதி மாநிலச் செயலாளர் பி.ஆர். நடராஜன் தலைமை ஏற்றார். திருப்பூர் நாடா ளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் ஆர்.பால சுப்பிரமணியம், தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன், மாவட்டத் தலை வர் பி.ஆர்.கணேசன், தியாகி குமரன் குடும் பத்தார் நிர்மல் ராஜ், சிவானந்தம், விட்டல் தாஸ், பேரன் தினேஷ், இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் எம்.ரவி, மாமன்ற உறுப்பினர் செந்தூர் முத்து, ஏஐடியுசி செயலாளர் என்.சேகர் மற் றும் பள்ளி குழந்தைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.