ஈரோடு, ஜூலை 20- ஒன்றிய பாஜக அரசு, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு நடப்பாண்டு அரவை பருவத்திற்கு 10.25 விழுக்காடு பிழிதிறன் உள்ள கரும்பு டன்னுக்கு ரூ.3150ம், 9.5 விழுக்காடு பிழிதிறன் உள்ள வற்றிற்கு ரூ.2919 அறிவித்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என கூறிய ஒன்றிய அரசு, மோசடியாக உற் பத்தி செலவை கணக்கிட்டு, 100 விழுக்காடு விலை உயர்வு அளித் துள்ளதாக அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரி வாயு, டிஏபி மற்றும் பொட்டாஷ் போன்ற உரங்கள், கரும்பு வெட்டுக்கூலி ஆகியவை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 5 ஆண்டுகளில் டன்னுக்கு ரூ.161 மட்டுமே உயர்த்தி யுள்ளது. இந்தாண்டு டன்னுக்கு ரூ.98 மட்டுமே உயர்த்தியுள்ளது. 1 கிலோவிற்கு 10 பைசா கூட உயர் வில்லை. எனவே, டன்னுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். மாநில அரசு கடந்த 5 ஆண்டுகளில் அறிவித்த விலையின்படி, பாக்கித் தொகையை உடனே பெற்றுத்தர வேண்டும். வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். ஆலை நிர்வாகங்கள் பதிவு செய்த கரும்பை உடனடியாக வெட்ட வேண்டும். வாகனங்கள் ஆலை வளாகத்திற்கு வந்தவுடன் எடை போட்டு இறக்க வேண்டும் என வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சக்தி சர்க்கரை ஆலை கமிட்டி துணைத் தலைவர் கே.ராமசாமி தலைமை ஏற்றார். தவிச மாவட்டச் செய லாளர் ஏ.எம்.முனுசாமி சிறப்புரை யாற்றினார். செயலாளர் வி.கார்த்தி கேயன், பொருளாளர் பி.வெங்கிடு சாமி, தவிச மாவட்டப் பொரு ளாளர் கே.ரத்தனம் ஆகியோர் உரையாற்றினர். இதில், திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம்
இதேபோன்று, கரும்புக்கு உரிய விலை வேண்டும். பண்ணாரி ஆலை பகுதியிலுள்ள விவசாயி கள் மீது போடபட்ட பொய் வழக்கு களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி சத்தியமங்கலம், பண்ணாரிஅம்மன் சர்க்கரை ஆலை கமிட்டியின் சார்பில் வடக்குப் பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பொருளாளர் எஸ்.வெங் கடாசலம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சங்கத் தின் செயலாளர் எஸ்.முத்துசாமி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க சத்தி தாலுகா தலைவர் பி.கணேஷ், சிஐடியு சார்பில் கே.மாரப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில், சங் கத்தின் உதவிச் செயலாளர் சதீஸ் ராஜ் நன்றி கூறினார்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம், மோக னூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி பெரு மாள் தலைமை வகித்தார். இந்திய மாணவர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் போராட் டத்தை துவக்கி வைத்து பேசினார். போராட்டத்தின் நோக்கங்கள் குறித்து விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.பெரு மாள், மோகனூர் சர்க்கரை ஆலை இயக்குநர் லட்சுமி பாலசுப்ர மணியம், தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிர மணி உள்ளிட்டோர் பேசினர். இதில், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.கே.சிவச் சந்திரன், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் நாமக்கல் மாவட்ட நிர் வாகிகள் என்.ஜோதி, வி.சதா சிவம், கரும்பு விவசாயிகள் சங்கத் தின் திருச்சி மாவட்ட பொறுப் பாளர்கள் பி.ராமநாதன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். முடி வில், கே.கிருஷ்ணன் நன்றி கூறி னார்.