districts

கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு மீன்பிடி உரிமை அமைச்சரிடம் மீனவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஈரோடு, ஜுன் 26- பவானி சாகர் அணையின் மீன்பிடிப்பு குத்தகை உரிமையை மீனவர்கள் கூட்டமைப் பிற்கு வழங்க வேண்டும் என அமைச்சர் சு. முத்துசாமியிடம் மனு அளித்தனர்.  இதுகுறித்து பவானிசகார் மீனவர் கூட்டு றவு விற்பனை சங்கம் மற்றும் சிறுமுறை மீன வர் கூட்டுறவு சங்கத்தினர், அமைச்சர் சு. முத்துசாமியிடம் கொடுத்த மனுவில் கூறியி ருப்பதாவது, பவானிசாகர் மீனவர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 322 உறுப்பினர்களும், சிறுமுகை மீனவர் கூட்டுறவு சங்கத்தில் 527  உறுப்பினர்களும், இணை உறுப்பினர்களாக 586 உறுப்பினர்களும் என 1435 மீனவர்கள் உள் ளோம். இதில் அரசால் நியமனம் செய்யப் பட்ட 622 மீனவர்கள் பவானிசாகர் அணையில் மீன்பிடித்து வருகின்றனர். மேலும் 500 பேர் மீன்பிடிப்பு சம்பந்தப்பட்ட தொழிலிலும் ஈடு பட்டுள்ளனர்.  மீனவர்களின் நலன் சார்ந்த 7 அம்ச கோரிக் கைகளை வைத்தோம். அதனை நிறைவேற்ற முடியாது என்று மீன் வளர்ச்சி கழகம் கூறிவிட் டது. எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மீன்வளத்துறையின் நிபந்தனை கள்படி கூட்டுறவு சங்கத்திற்கே மீன்பிடிப்பு உரிமையை வழங்க வேண்டும் என நீதிமன் றம் தீர்ப்பளித்தது. ஆனால் மீன் வளர்ச்சி கழக மேலாளர் சக்தி&கோ என்ற நிறுவனத்திற்கு ஆதரவாகவும், பங்கு மீனவர்கள் குத்தகை செலுத்த முடியாது, அவர்கள் பிச்சைக்காரர் கள் என ஏளனமாக பேசி வருகிறார்.  மீனவர்களான எங்களிடம் வண்டி, வாக னங்கள் உள்ளன. அவற்றின் மூலம் மீன் மற் றும் இதர பொருட்களை எடுத்துச் செல்ல முடி யும். காவல் பணிக்கும் எங்களிடம் வாகனங் கள் உள்ளன. மோட்டார் இன்ஜின்கள் பொருத் திய படகுகளும் உள்ளன. மேலும், அரசால் நியமனம் செய்யப்பட்ட 622 உறுப்பினர்கள் தலா ரூ.1 லட்சம் வீதம் செலுத்தினாலே ரூ.6  கோடியே 22 லட்சம் வசூலாகும். இவ்வாறு எங்களால் குத்தகை மற்றும் இதர தொகை களையும் செலுத்த முடியும். மீன்பிடி உரி மையை நீதிமன்றத் தீர்ப்பின்படி கூட்டுறவு மீனவர் சங்கங்களிடம் ஒப்படைக்க வேண் டும். இதற்கு மாறாக பவானிசாகர் அணையில் மீன்வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் பழனிசாமி தனது உறவினர் நிறுவனமான சக்தி & கோ நிறுவனத்திற்கு இடைக்கால குத்தகையை வழங்கியுள்ளார். அவர்கள், உண்மையான கணக்கினை காட்டாமல் கொள்ளை அடிக்கிறார்கள். இதனால், பங்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். எனவே பவானிசாகர் அணையின் மீன்பிடி உரிமையை நீதிமன்ற தீர்ப்பின்படி எங்கள் மீனவர் கூட்டுறவு சங்கத்திடம் வழங்க வேண் டும் என மனு அளித்தனர். இதேபோன்று, மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தனர்.