districts

img

ஆறுகளில் மீன் குஞ்சுகள் இருப்பு வைக்கும் திட்டம் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்

சேலம், அக்.28- மீன்வளத் துறையின் சார்பில் மீன் குஞ்சுகளை  ஆறுகளில் இருப்பு செய்தல்  திட்டத்தின் கீழ் முதற்கட் மாக 1 லட்சம் விரலி மீன்கள்  இருப்பு வைக்கும் பணி யினை மேட்டூர், தெர்மல்  நான்கு ரோடு மேம்பாலம்  பகுதியில் சனியன்று நக ராட்சி நிர்வாகத்துறை  அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு  தெரிவித்ததவாது, விவசாயத்தை போலவே  மீன் வளத்தையும் பெருக்கவே அரசு  ஆராய்ச்சி செய்து உள்நாட்டு மீனவர்கள்  பயன்பெறவும், அதன் மூலம் அதிகளவி லான மக்கள் பயன்பெற தமிழ்நாடு அரசு முயற்சி செய்து வருகின்றது.  அந்த வகையில் தமிழ்நாட்டில் நாட்டின்  மீன் வளங்களை பாதுகாத்து பெருக்கிட ஆறு களில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்திடும் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டில் மொத்தம் 40 லட்சம் மீன்குஞ்சுகள் ரூ.120 லட்சம் செலவில் ஆறுகளில் இருப்பு செய் திடும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்ட மானது ஆறுகளை தங்களது வாழ்வாதார மாக கொண்டுள்ள உள்நாட்டு மீனவர்களின் வருவாயினை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி ஆற்றில் சேல்கெண்டை, கல்பாசு மற்றும்  இந்திய பெருங்கெண்டைகளான கட்லா,  ரோகு, மிர்கால் ஆகிய மீன்குஞ்சுகள் இருப்பு  செய்யப்படுகிறது. இத்திட்டத்தினை செயல் படுத்திட தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளான காவிரி, தென்பெண்ணையாறு, பவானி, தாமிரபரணி, வைகை, வெண்ணாறு, வெட்டாறு, கோரையாறு, கொள்ளிடம், அமராவதி, ஆகிய ஆறுகளில் தாய்மீன்கள் உயிருடன் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு, தூண்டப்பட்ட முறையில் நாட்டின தாய்  மீன்களிலிருந்து மீன்குஞ்சுகளை உற்பத்தி  செய்யும்போது மீன்குஞ்சுகளின் பிழைப்புத் திறன் வெகுவாக அதிகரித்திடும். சேலம் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட 3 லட்சம் விரலி மீன்கள் 80மி.மீ - 100மி.மீ அளவில் வளர்க்கப்பட்டு, முதல்கட்டமாக ரூ.2.70 லட்சம் மதிப்பீட்டில் 1 லட்சம் விரலி மீன்கள் மேட்டூர், காவேரி ஆற்றின் தெர்மல் நான்கு ரோடு மேம்பாலம் பகுதி யில் இருப்பு செய்யப்படும் பணி தொடங் கப்பட்டுள்ளது என கூறினார்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப் பினர் இரா.இராஜேந்திரன், மேட்டூர் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம், மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் தணிக்காசலம், மேட்டூர் நகரமன்ற தலைவர் சந்திரா உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.