districts

img

தீயணைப்புத்துறையினர் ஒத்திகை

தருமபுரி, அக்.17- தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழை பேரிடர் கால முன்னெச்சரிக்கை தொடர்பாக தீய ணைப்புத்துறை சார்பில் ஒத்திகை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட  தீயணைப்பு துறை சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில்  பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கீதா ராணி தலைமை வகித்தார். இதில் பருவ மழை காலங்களில் பொதுமக்களை காப்பாற்றவும், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ரப்பர் படகு, உயர் கோபுர  விளக்கு, மிதவை மற்றும் உடை, விபத்து ஏற்படும் பொழுது  இரும்பு பொருட்களை வெட்டுவதற்கான நவீன இயந்திரம்,  ஹைட்ராலிக் முறையில் இயங்கும் கருவி, மிதவை பம்பு,  வாகனங்களின் அடியில் சிக்கியர்வளை மீட்க உதவும்  பொருட்களின் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப் பட்டன. தொடர்ந்து தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள், உயர் மாடி கட்டடங்களில் மாடிப்படி வழியாக வர முடியாத சமயத்தில் கயிறு மூலமாக மீட்பது, கூட்ட நெரிசலில்  விழுந்தால் தற்காத்துக்கொள்வது, ஆடைகள் தீப்பற்றி கொண்டால் தற்காத்து கொள்வது என தீயணைப்பு வீரர்கள்  மூலம் செயல் விளக்கங்கள் மூலம் செய்து காண்பிக் கப்பட்டன.