உடுமலை, பிப்.20- உடுமலை பகுதியில் வியாழனன்று ஒரே நாளில் 5 இடங்க ளில் தீ விபத்து ஏற்பட்டது. உடுமலை, மயில்வாடி தனியார் மில், பெரிய கோட்டை மின்வாரிய அலுவலகம், யுகேசி நகரில் உள்ள பந்தல் கடை, கோமங்கலம் பகுதியில் உள்ள விவசாய பூமி, குடிமங்கலம் வெள்ளியம்பாளையம் தனியார் இடம் ஆகிய பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதைதொடர்ந்து சம்பவ இடங்களுக்கு வந்த தீயணைப்பு துறையினர் மாலைக்குள் அனைத்து பகுதி களிலும் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், வரும் காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மிகுந்த எச்ச ரிக்கையுடன் இருக்கும் படி அறிவித்துள்ளனர்.