districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஏற்காடு மலைப்பாதையில் தீ விபத்து

ஏற்காடு மலைப்பாதையில் தீ விபத்து சேலம், மார்ச் 17- ஏற்காடு மலைப்பாதையில் ஞாயிறன்று காலை ஏற் பட்ட தீ விபத்தால், பல ஏக்கர் மரங்கள் தீக்கிரையா கின. சேலம் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஏற்காடு கோடை வாஸ்தலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிக ரித்த வண்ணம் உள்ளது. கோடை காலம் தொடங்கி யதைத் தொடர்ந்து அங்கு செழிப்பாக இருந்த மரம் செடிகள் காய்ந்துள்ளன. இதனால் எளிதில் தீப்பற்றும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஞாயிறன்று காலை ஏற்காடு மலைப்பாதையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல ஏக்கர் மரங்கள் தீக்கிரையா கின. மேலும், தீ பரவாமல் இருக்க வனத்துறை சார்பில் தீ தடுப்பு குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள னர். பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் எளிதில் தீ பரவும் பொருட்களை வனப்பகுதியில் வீசி செல்ல  வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ள னர்.

மக்கள் குறைதீர் கூட்டங்கள் ரத்து

மக்கள் குறைதீர் கூட்டங்கள் ரத்து தருமபுரி, மார்ச் 17- மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறை கள் அமலுக்கு வந்ததால், மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தருமபுரி, ஈரோடு மாவட்ட ஆட்சி யர்கள்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது, மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் சனிக்கிழமை மாலை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெ றும் மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம் போன்ற அனைத்து கூட்டங்களும் ரத்து செய்யப் படுகின்றன. அதேபோல மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்புத்திட்ட முகாம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் போன்ற எவ்வித முகாம்களும் நடை பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமூர்த்தி அணையை தூர்வார வேண்டும்

உடுமலை, மார்ச் 17- கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், லட்சக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும் திரு மூர்த்தி அணையை தூர்வார அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே திருமூர்த்தி அணை உள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட (பிஏபி) தொகுப்பு அணை களில் இது கடைசி அணையாகும். பரம்பிக் குளம், பெருவாரிபள்ளம், தூணக்கடவு அணைகள் வழியாக சர்க்கார்பதி மின்நிலை யத்துக்கு செல்லும் தண்ணீர், காண்டூர் கால் வாய் வழியாக சுமார் 45 கிமீ தூரம் பயணித்து  திருமூர்த்தி அணைக்கு வந்து சேர்கிறது. இது தவிர, மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும்  மழை, திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவி வழியாக திருமூர்த்தி அணைக்கு வந்து சேர் கிறது. 60 அடி உயரம் கொண்ட இந்த அணை 1967 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதன்  மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறு கிறது. நான்கு மண்டலங்களாக பிரித்து பாச னத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. மேலும் உடுமலை நகராட்சி பகுதிக்கும், ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கும் கூட்டுக்குடிநீர் திட் டம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. அணை யின் நீர்மட்ட கொள்ளளவு ஒன்றரை டிஎம்சி தான் என்றாலும், ஆண்டுக்கு பத்து மாதங்கள் வரை தொடர்ச்சியாக தண்ணீர் பெறப்பட்டு, பிஏபி பாசனத்தில் அதிகபட்சமாக 4 லட்சம் ஏக்கர் வரை பயன்பெறுகிறது. அணை கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை ஒருமுறைகூட தூர் வாரப்படவில்லை. இதனால் அணையின் கிழக்கு பகுதியிலும், தெற்கு பகுதியிலும் அதி களவு வண்டல் மண் குவிந்து காணப்படுகி றது. பாலாறு மூலமும், கான்டூர் கால்வாய் மூலமும் அடித்துவரப்படும் வண்டல் மண் அணையில் சேர்ந்து கிடக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியின் போது, அணை, குளம்  உள்ளிட்ட நீர்நிலைகளில் வண்டல் மண்  எடுத்து இலவசமாக விவசாயிகள் பயன்படுத் திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித் தது. அதன்பேரில், திருமூர்த்தி அணையின் தெற்கு பகுதியில் அதிகளவு விவசாயிகள் வண்டல் மண் தோண்டி எடுத்தனர். அதுவும் கரையோரப்பகுதியில் மட்டும், அனுமதிக்கப் பட்ட அளவுக்கு அதிக ஆழத்தில் தோண்டி எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அணை யின் உள்பகுதியிலும் பரவலாக மண் எடுக்க  வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது தண்ணீர் குறைந்த நிலையில் மைதானம் போல் அணை காணப்படுகிறது.அணையின் கிழக்கு பகுதி மண் மேடாக காட்சி அளிக்கிறது. இந்த பகுதியில் தூர்  வாரினால் அதிக தண்ணீர் சேமிக்க முடி யும். இதுகுறித்து அணை பாசன விவசாயிகள் கூறுகையில், லட்சக்கணக்கான பாசன பரப் புக்கும், கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கும் முக் கிய நீராதாரமாக விளங்கும் திருமூர்த்தி அணையில் பெரும் பகுதி மணல் மேடாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக, கிழக்கு பகுதி யில் அதிகளவு மண் காணப்படுகிறது. இங்கு  தூர்வாரினால் கூடுதலாக அரை டிஎம்சி தண் ணீர் சேமிக்கலாம். அரசே தூர் வாராவிட்டா லும் கூட, முன்பு அனுமதித்தது போல விவசா யிகளே இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும், என்றனர்.

பெண் சிசு உயிரிழப்பு: போலீசார் விசாரணை

தருமபுரி, மார்ச் 17- மாரண்டஅள்ளி அருகே பிறந்து 25 நாட் களே ஆன பெண் சிசு உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள சாமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சவுந் தர்யா (26). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 25 நாட்களுக்கு முன்பு, சவுந்தர்யாவுக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அந்த குழந்தைக்கு பால் கொடுத்த போது, திடீ ரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட் டுள்ளது. இதன்பின் குழந்தையை தட்டி  விட்டு தூங்க வைத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து குழந்தையை பார்த்த போது மயங் கிய நிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சி யடைந்த பெற்றோர், மாரண்டஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரி சோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதன் பின் குழந்தையின் உடல் பிரேத பரிசோத னைக்காக தருமபுரி அரசு மருத்துவம னைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து மாரண்டஅள்ளி காவல் துறையினர் வழக்குபதிவு செய்து, விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

தெரு நாய் கடித்து 20 பேர் காயம்

தெரு நாய் கடித்து 20 பேர் காயம் நாமக்கல் மார்ச்.17- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகி றது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஒன் றாக சேர்ந்து கொண்டு, பொதுமக்களை அச்சுறுத்துவது, சண்டையிட்டுக் கொள்வது, நடு சாலையில் படுத்து உறங்கு வது என தெருநாய்களின் நடமாட்டம்  அதிகரித்து காணப்ப டுகிறது. மேலும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அவ்வப்போது தெருநாய்கள் பிடிக்கப்பட்டு வெறிநாய் தடுப்பூசி மற்றும்  கருத்தடை ஊசி உள்ளிட்டவை செலுத்தப்பட்டு வருகிறது.  இருந்தபோதிலும்  தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்ப டுத்த முடியாத நிலையே உள்ளது. இந்நிலையில் சனியன்று  ஒட்டமெத்தை, பூலாக்காட்டூர், குமாரபாளையம் சாலை  உள்ளிட்ட இடங்களில் கருப்பு நிற தெரு நாய் ஒன்று சாலை யில் நடந்து செல்வோர், இருசக்கர வாகனத்தில் செல் வோரை துரத்தி துரத்தி கடித்துள்ளது. இதனை அடுத்து நாய்  கடியால் பாதிக்கப்பட்டவர்கள்  பள்ளிபாளையம் அரசு மருத் துவமனையில் அனுமதிக்கபட்டனர். நாய் கடியால் லேசாக பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், பெருமாள்மலை பகு தியை சேர்ந்த மூதாட்டி சின்னம்மா(70), பள்ளிபாளையம் நகர  மன்ற வார்டு முன்னாள் உறுப்பினர் ரங்கசாமி(69) உள்ளிட்ட  ஒன்பது பேர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை  பெற்று வருகின்றனர். மேலும் பள்ளிபாளையம் சுற்றுவட் டார பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் ஒரே  நேரத்தில் 20க்கும் மேற்பட்டோரை கடித்துள்ள இச்சம்ப வம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. மேலும் அரசு பள்ளிகள், அருகிலேயே தெரு நாய்கள்  அதிகளவு சுற்றி திரிவதால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவி யர்கள் அச்சமடைகின்றனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

கோபி, மார்ச் 17- நம்பியூர் அருகே சீரான குடிநீர் விநியோ கம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள  நம்பியூர் பேரூராட்சிக்குட்பட்ட காந்திபுரம் வடக்கு வீதியில் 100க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலை யில் குடியிருப்பு பகுதியில் கடந்த 10 நாட்க ளுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் முறை யாக செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள்,  நம்பியூர் - புளியம்பட்டி சாலையில் காலி  குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட னர். தகவலறிந்து வந்த நம்பியூர் காவல்துறை யினர் பொதுமக்கள் முன்னிலையில், குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், கடந்த சில  தினங்களுக்கு முன் கடத்தூர் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால், குடி நீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணி கள் நடைபெற்று வந்தது. இதனால், குடிநீர் விநியோகப்பதில் தாமதம் ஏற்பட்டது. இன்று இரவுக்குள் பணிகள் நிறைவுற்று குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததாக, போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.