கோவை, ஏப்.7- வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட திடீரென தீ விபத்தால், அந்த பகுதியே புகை மூட்டமாக காட்சியளித் தது. கோவை மாவட்டம், வெள்ளலூரில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு சனியன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அப்ப குதி மக்கள் அளித்த தகவலின் பேரில், கோவை மாவட்டத் திலிருந்து 11 தீயணைப்பு வாகனங்களும், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தலா 2 வாகனங்களும் வரவழைக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட தீயணைப்பாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் 20க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு தீ அணைக் கும் பணி நடைபெற்றது. விடிய, விடிய தண்ணீர் ஊற்றி தீயானது அணைக்கப்பட்டது. இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.