districts

img

வனவிலங்குகளால் ஏற்படும் இழப்புகளுக்கு நிரந்தர தீர்வு காண்க

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மே.பாளையம், மார்ச் 17- மேட்டுப்பாளையத்தைச் சுற்றியுள்ள விவசாய நிலங்க ளுக்குள் புகும் வனவிலங்கு களினால் ஏற்படும் இழப்புக ளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.  கோவை மாவட்டம்,மேட்டுப் பாளையம் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளான சிறுமுகை, காரமடை உள் ளிட்ட இடங்களில் விவசாயி நிலத்திற்குள் வனவிலங்குகளின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. யானை, காட்டுப்பன்றி, மான் போன்ற விலங்கினங் கள் காட்டை விட்டு வெளியேறி விவசாய விளைநிலங்களுக்குள் பயிர்களை அழிப் பது அன்றாட நிகழ்வாகி வருகிறது. இது தவிர கடந்த ஒரு மாத காலமாக இப்பகுதி களில் சிறுத்தைகள் நடமாட்டமும் அதிகமா கியுள்ளது. 

இவை ஊருக்குள் புகுந்து விவசாய தோட்டங்களில் கட்டி வைக்கபட்டிருக்கும் ஆடு, மாடு போன்ற வீட்டு விலங்குகளை கொன்று வேட்டையாடி வருகின்றன. இவ்வாறு பயிர்கள் மட்டுமின்றி கால்நடை களையும் கொன்று வருவதால் இப்பகுதி களில் விவசாயத்தையே தொடர இயலாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில் வன விலங்குகளால் ஏற்படும் பிரச்சனைக்கு நிரந் தர தீர்வு காண வலியுறுத்தியும், ஊருக்குள் நுழையும் காட்டுப்பன்றி மற்றும் சிறுத்தை களை விரட்ட வனத்துறையினர் நடவ டிக்கை எடுக்கவேண்டுமெனக் கோரி மேட்டுப்பாளையத்தில் உள்ள மலையடி வார கிராமமான தாயனூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ரங்கசாமி மற்றும் மாநிலச் செய லாளர் வேணுகோபால் ஆகியோர்  தலைமை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத் தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு வனவிலங்குகளின் நடமாட் டத்தை கட்டுப்படுத்தக் கோரி முழக்கமிட்ட னர். மேலும், வனவிலங்குகளால் இழப்பை சந்தித்து வரும் விவசாயிகளின் கடன் தொகையினை கட்ட வலியுறுத்தி வங்கி கள் நெருக்கடி தந்து வருவதாக புகார் தெரி விக்கும் விவசாயிகள், சேதங்களுக்கு வனத் துறை சார்பில் முறையாக இழப்பீட்டு தொகை வழங்கப்படுவதில்லை எனவும் குற்றஞ்சாட்டினர்.