districts

விவசாயிகளுக்கு உரத்தட்டுப்பாடு: கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க கோரிக்கை

திருப்பூர், நவ. 23- திருப்பூர் கோட்டத்திற்கு உட் பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு உரத்தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே  கூட்டுறவு சங்கங்கள் மூலம் யூரியா  உரம் வழங்க நடவடிக்கை எடுக்கு மாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  கூறியுள்ளது. புதனன்று நடைபெற்ற திருப்பூர்  வருவாய் கோட்ட அளவிலான சார்  ஆட்சியர் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர்  ஆர்.குமார் வலியுறுத்திய கோரிக்கை பின்வருமாறு: ஊத்துக்குளி, குன்னத்தூர் அவி நாசி, சேவூர், பல்லடம்,  கரடிவாவி, காமநாயக்கன்பாளையம் பகுதிக ளில் உரத்தட்டுப்பாடு நிலவி வருகி றது. குறிப்பாக ஊத்துக்குளி, அவி நாசி தாலுகாவில் மானாவாரி சோளம்  பயிர்களுக்கும், இறவை மக்காச் சோளத்திற்கும் மற்றும் புகையிலை,  வாழை, மஞ்சள் போன்ற பயிர் களுக்கும் யூரியா அதிக தேவை உள் ளது. தேவைக்கேற்ப உரங்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் இருப்பு வைக்க நட வடிக்கை மேற்கொள்ளவில்லை.

பெரும்பாலான கூட்டுறவு சங்கங் களில் உரம் இருப்பு இல்லை.  இதைப்  பயன்படுத்தி தனியார் விற்பனை நிலையங்களில் யூரியா உரம் தேவைப்படுபவருக்கு, டிஏபி,  காம்ப்ளக்ஸ் போன்ற உரங்கள்  வாங்கினால் தான் யூரியா  கிடைக் கும் என்று நிர்பந்தப்படுத்துகி றார்கள். விவசாயிகள் தலையிட்டு கேட்ட பின்பு  அவிநாசி தாலுக்கா  குட்டகம், கூட்டப்பள்ளி சங்கங்க ளுக்கு தலா 3 டன் யூரியா ஒதுக்கீடு  செய்யப்பட்டது. இது விவசாயிக ளின் தேவைக்கு  போதுமானதாக இல்லை. ஆகவே விவசாயிகள் அவ சர தேவை கருதி தேவைப்படும் பகுதி களில் அப்பகுதியில் உள்ள கூட்டு றவு சங்கங்களில் உரங்களை வர வைத்து விவசாயிகளுக்கு வழங்கு வதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். சேவூர், அவிநாசி, பல்லடம் வட் டாரங்களில் உரக்கடைகளை முறை யாக வேளாண் துறை அலுவலர் கள் ஆய்வு செய்து உரம் இருப்பு உள்ள கடைகளின் விவரங்களை பொதுவெளியில் அறிவிக்க வேண் டும்.  ஊத்துக்குளி தாலுக்கா, ரெட்டிபா ளையம் கிராமம், சின்னகுட்டை தோட்டம் பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் நகரப் பகுதியில் இருந்து வரும் மழைநீர் தேங்கி 10 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளது. விவசாயிகளின் வீடுகளுக்குள்ளும், கால்நடை அடைப்புக்குள்ளும் மழை நீர் புகுந்து விட்டது. ஆகவே, அப்ப குதி விவசாய நிலங்களுக்குள் மழை வெள்ளநீர் புகுந்து சேதப்படுத்தாத வகையில், ஊத்துக்குளியில் இருந்து விஜயமங்கலம் செல்லும் சாலையில் ஊத்துக்குளி முதல் அவ ரக்கரை வரை மழை நீர் செல்ல வெள் ளநீர்  வடிகால்  அமைத்து தர வேண் டும்.

சமீபத்தில் தமிழக அரசு அறிவித் துள்ள பால் கொள்முதல் விலையை  வரவேற்கின்றோம். அதே நேரத்தில்  கட்டுபடியான விலை இல்லை என்று  விவசாயிகள் வருத்தப்படும் நிலை  உள்ளது. ஆகவே லிட்டர் ஒன்றுக்கு  எருமைப்பாலுக்கு ரூ.51, பசும் பாலுக்கு ரூ. 42 கிடைக்கும் வகை யில் உயர்த்தி வழங்க வேண்டும். தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழ கத்தால் உயர்மின் கோபுரம் அமை க்கப்பட்டுள்ள அரசூர்-ஈங்கூர்  வழித் தடத்தில் அவிநாசி, ஊத்துக்குளி தாலுக்கா பகுதிகளில் பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு போது மான இழப்பீடு வழங்கவில்லை. விவ சாயிகளுக்கு வங்கி கணக்கில் செலுத்தியுள்ள இழப்பீட்டுக்கான விபர சீட்டு ஏதும் வழங்கப்படாததால் தனக்கு எத்தனை ஏக்கர் நிலமும்  பாதிக்கப்பட்டது, அதில் எவ்வளவு  தொகை வந்துள்ளது என்று விவசா யிகள் தெரிந்து கொள்வதற்கும்,  சரி யான கணக்கீடு இல்லை என்று சொன் னால் மேல்முறையீடு செய்வதற்கும் விவசாயிகள் செய்வது அறியாத திகைத்து நிற்கின்றனர் ஆகவே பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசா யிகளுக்கும் தனித்தனி கணக்கீடு சீட்டு வழங்க வருவாய்த்துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ் வாறு அவர் கூறினார்.