கோவை, ஜூன் 12- பாலியல் வன்கொடு மைக்கு எதிராக, கடுமை யான சட்டங்களை நிறை வேற்ற வலியுறுத்தி, கோவையில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் டியூப் லைட்டுகளின் மீது பறைய டித்துக்கொண்டே நடந்து சாதனை புரிந்துள்ளார். கோவை சூலூர் பகு தியை சேர்ந்தவர் கலையரசன். இவர் கிராமிய புதல்வன் எனும் அகாடமி நிறு வனத்தை நடத்தி வருகிறார். கரகாட்டம், ஒயிலாட்டம், பறை இசை உள்ளிட்ட தமி ழக பாரம்பரிய கலைகளை இலவசமாக கற்று கொடுத்து வருகிறார். இவரது மனைவி பிரகலட்சுமியும் கிராமிய கலைகளில் ஆர்வமுடையவர். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் உலக சாதனை முயற்சியின் ஒருபகுதியாக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், இந்த குற்றங்களுக்கான தண்டனையை கடுமை யாக்க வேண்டும் என்கிற கருவை முன் வைத்து சாதனை நிகழ்வை நடத்தியுள் ளார். சூலூர் ஏர்போர்ஸ் அருகே உள்ள மைதானத்தில் கைகளில் பறை இசைத்த படி, 30 டியூப் லைட்டுகளின் மீது, உச்சி வெயி லில் நடந்த படி உலக சாதனை முயற்சி யில் ஈடுபட்டார். 3.55 விநாடிகளில் ஒவ் வொரு லைட்டையும் கால்களால் உடைத்த படி நடந்து சென்றார். இந்த சாதனை பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. நிறைமாத கர்ப் பிணிகளுக்கு தைரியம் மற்றும் ஊக்கம் அளிக்கும் விதமாக இவர் செய்த சாத னையை பாராட்டி பிரகலட்சுமிக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.