அவிநாசி, மே 24- அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் கந்துவட்டி கொடுமையால் பேரூராட்சி ஒப் பந்த சுகாதார பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்ப வத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த ராயம்பாளையம் பகுதியைச் சேர்ந் தவர் சந்திரன் (35). இவரது மனைவி பரிமளா (30), அவிநாசி பேரூராட்சியில் ஒப்பந்த சுகா தார ஊழியராக பணியாற்றி வந்தார். இவர்க ளுக்கு சுதேசி என்ற மகனும், தேவதர்ஷினி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சந் திரன் அதேபகுதியை சேர்ந்த தனசேகர் என் பவரிடம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூ.27 ஆயிரம் கந்துவட்டிக்கு வாங்கியுள் ளார். வாராந்தோறும் கந்துவட்டி அடிப்படை யில் பணம் செலுத்தி 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். இருப்பினும் தனசேகரன், மீதி ரூ.17 ஆயிரத்தை உடனடியாக தர வேண் டும் எனக்கூறி தகாத வார்த்தைகளால் பேசி கடந்த சில நாள்களாக தொடர்ந்து தொந்த ரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் உச்சக்கட்டமாக திங்களன்று தனசே கர், அவரது தாயார் பூவாத்தாள் ஆகியோர், சந்திரன் வீட்டில் இல்லாதபோது குழந்தைக ளுடன் இருந்த பரிமளாவை சாதிப்பெயரை கூறியும், தகாத வார்த்தைகளால் திட்டியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் மனவேதனையடைந்த பரி மளா வீட்டுக்குள் சென்று தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார். இதன்பின் வீட் டிற்கு வந்த, சந்திரன் பரிமளா தூக்கில் தொங் கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உடனடி யாக பரிமளாவை மீட்டு அவிநாசி அரசு மருத் துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது, பரிமளா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து அவிநாசி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இதற்கிடையே பரிமளாவின் உறவினர் கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள்,
தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப் பினர், பரிமாளாவின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், தனசேகரன், அவரது தாயார் பூவாத் தாள் ஆகியோரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திலும், கந்துவட்டித் தடைச் சட்டத்தி லும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். முதல் தகவல் அறிக்கையில் முறையாக வழக்குப்பதிவு செய்ய வேண் டும். உயிரிழந்த பரிமளாவின் குடும்பத் திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். பேரூராட்சி சுகாதார முன்களப் பணியாளரான பரிமளாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண் டும் என வலியுறுத்தி, பரிமளாவின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வருவாய் கோட்டாட்சி யர் பண்டரிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதில், தனசேகர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விட் டோம். அவரது தாயாரையும் விரைவில் கைது செய்து விடுவோம். தங்கள் கோரிக் கையான இழப்பீடு தொகையும், நாளை கொடுத்து விடுவோம். வேலை குறித்து அரசு தான் முடிவு செய்யும் என அதிகாரி கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப் பினும் பூவாத்தாளை கைது செய்த பிறகே உடலை வாங்குவோம் என்றுக்கூறி போராட் டத்தை தொடர்ந்து வருகின்றனர். முன்னதாக, இப்போராட்டத்தில் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ச.நந்தகோபால், துணைச்செய லாளர் கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வெங் கடாசலம், பழனிச்சாமி, சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் ராஜன், ஒன்றிய நிர்வாகி முருகேஷ், ஆதித்தமிழர் பேரவையின் விடு தலை செல்வன், மணி உட்பட பலர் போரா டும் மக்களோடு இருந்து வருகின்றனர்.