வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் வேட்பாளர் களம் நிகழ்ச்சி
ஈரோடு, பிப்.6- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலையொட்டி அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர் களம் நிகழ்ச்சி நடத் தப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் வேட்பாளர் களம் நிகழ்ச்சி கூட்டமைப்பு தலைவர் வி.கே.ராஜ மாணிக்கம் தலைமையில் சங்க அலுவ லகத்தில் நடைபெற்றது. இதில் மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதா வது, இத்தொகுதி மக்களுக்கான கோரிக் கைகளை நிறைவேற்ற தொடர்ந்து முயற்சி செய்வேன், என்றார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்து சாமி பேசியதாவது, ஈரோடு மாநகர பகு தியில் சாலை விரிவாக்கம் மற்றும் சீர மைப்புக்காக ரூ.480 கோடி ஒதுக்கப்பட் டுள்ளது. சோலார் மற்றும் சூளையில் 2 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட வுள்ளது. இந்த நிகழ்வில் பல்வேறு சங் கங்கள் மூலம் வழங்கப்பட்ட கோரிக் கைகளை விரைவாக பரிசீலித்து 6 மாத காலத்திற்குள் நிறைவேற்ற நடவ டிக்கை எடுக்கப்படும், என்றார். இதையடுத்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தனது உரையில், ஈரோடு கனி மார்க்கெட் புதிய வளாகத்தில் கடைகள் ஒதுக்கீட்டில் ஏற்கனவே அங்கு கடை வைத்திருந்த வர்களுக்கு முன்னுரிமை, சொத்து வரி குறைப்பு, சாலைகளை அகலப்படுத்து தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வியா பாரிகள் தெரிவித்தனர். இந்த கோரிக் கைகள் அனைத்தும் விரைவில் நிறை வேற்றப்படும் குறிப்பிட்டார். அமைச் சர்கள் எ.வ.வேலு, த.மோ.அன்பரசன், கே.ஆர்.பெரியகருப்பன், வி.மெய்யநா தன், அ.கணேசமூர்த்தி எம்.பி., உள்ளிட் டோர் பங்கேற்றனர். இதேபோல, அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, முன் னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, கே. ஏ.செங்கோட்டையன், கே.வி.இராம லிங்கம், கே.சி.கருப்பணன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை சேலம் சார் பதிவாளர் உட்பட இருவர் கைது
சேலம், பிப்.6- சேலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் மற்றும் இடைத் தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசா ரணை மேற்கொண்டனர். சேலம் குகை பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேலு. இவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயலாளராக இருந்து வரு கிறார். இவர் அவரது தாயார் பெயரில் உள்ள நிலத்தை அவரது பெயரில் பெயர் மாற்ற செய்ய சேலம், உடையாப்பட்டி பகுதியில் இருக்கும் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் இருக்கும் தாதகாப்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் மனு செய்து இருந்தார். இந்நிலையில், இடைத்தரகர் கண் ணன் என்பவர் பழனிவேலுவை தொடர்பு கொண்டு ரூபாய் 50 ஆயிரம் லஞ்சப்பணம் வழங்கினால் உடனே பத்திரப்பதிவு செய்து தருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பழனிவேலு சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீ சில் புகார் செய்தார். இதனையடுத்து, துணை காவல் கண்கா ணிப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் 50 ஆயிரத்தை பழனி வேலுவிடம் திங்களன்று கொடுத்து அனுப் பினார். இந்த பணத்தை பழனிவேலு, இடைத் தரகர் கண்ணனிடம் வழங்கினார். பிறகு கண் ணன் இந்த பணத்தை சார் பதிவாளர் செல்வ பாண்டியிடம் கொடுத்தார். அப்போது மறைந் திருந்த துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் கையும், களவுமாக இருவரையும் பிடித்தனர். இதன்பிறகு லஞ்ச பணம் ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு, சார் பதிவாளர் செல்வபாண்டி மற்றும் இடைத்தரகர் கண் ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரிடமும் தொடர்ந்து விசா ரணை நடைபெற்று வருகிறது. மின்வாரிய அலுவலகத்தில் லஞ்சம் இதேபோன்று சேலம் மாவட்டம், வேம் படிதாளம் துணை மின் நிலையம் கட்டுப் பாட்டின் கீழ் இயங்கி வரும் உதவி பொறியா ளர் அலுவலகம் இடங்கணசாலை நகராட் சிக்குட்பட்ட கே.கே.நகர் பகுதியில் இயங்கி வருகின்றன. இங்கு விசைத்தறி, விவசாய, வீடு, கடைகள் உள்ளிட்ட மின் இணைப்பு பெற வரும் பொது மக்களிடம் உதவி பொறியா ளர் உள்பட்ட அதிகம் லஞ்சம் வாங்குவதாக தொடர் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், கே.கே.நகர் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் ஜெயக்குமார் (போர்மேன்) என்பவர் மின் இணைப்பு பெற வரும் நபர்களிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
மின்தடை
கோவை, பிப்.6- கோவையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக் காக ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகு திகளில் மின் தடை அறிவிக் கப்பட்டு வருகிறது. அதன் படி கோவை மாவட்டத்தில் செவ்வாயன்று எல்லாப்பா ளையம் துணை மின் நிலை யத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோ கம் இருக்காது. இதே போன்று, புதனன்று (நாளை) மாதம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகு திகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரி யம் அறிவித்துள்ளது.
குளத்தில் வியாபாரி சடலமாக மீட்பு
கோவை, பிப்.6- புகைப்பிடித்ததை தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய வியாபாரி குளத்தில் உயிரிழந்த நிலையில் மீட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை கரும்பு கடை ஆசாத் நகர் 4 ஆவது வீதியை சேர்ந்தவர் முகமது ஹனிபா (29). காய்கறி வியாபாரி. இவர் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப் பட்டு வந்தார். இதற்காக இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த முகமது ஹனிபா சம்பவத்தன்று வீட் டில் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த குடும் பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து முகமது ஹனி பாவின் தந்தை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முக மது ஹனிபாவை தேடி வந்தனர்.அப்போது போலீசாருக்கு வாளாங்குளத்தில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி னர். விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டது மாயமான முக மது ஹனிபா என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முகமது ஹனிபா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது கார ணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரத்தில் நாளை மின் குறைதீர்க்கும் நாள்
தாராபுரம், பிப்.6- தாராபுரம் மின்வாரிய அலுவலகத்தில் நாளை மின்குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட் டுள்ளது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பல்ல டம் மின்பகிர்மான வட்டம், தாராபுரம் கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 8 ஆம் தேதி புதன்கிழமை மேற்பார்வை பொறியாளர் பல்லடம் மின்ப கிர்மான வட்டம் தலைமையில் நடைபெற உள்ளது. தாராபுரம் தளவாய்பட்டிணம் சாலையில் உள்ள மின்வாரிய கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் 2.00 மணி வரை நடைபெற உள்ள கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு செயற்பொறியாளர் (பொறுப்பு) எஸ்.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
உடுமலையில் இன்று மின்தடை
உடுமலை, பிப்.6- உடுமலை தாலுக்கா கிளுவன்காட்டூர் துணை மின் நிலை யத்திற்கு உட்பட்ட மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் 7 ஆம் தேதி செவ்வாய்யன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருகாது என்று தெரி விக்கப்பட்டுள்ளது. மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்: கிளுவன்காட்டூர், எலையமுத்தூர், பெரிசனம்பட்டி, கல் லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி,கொமர லிங்கம், அமராவதிநகர், கோவிந்தாபுரம், அமராவதி செக் போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலபட்டி மற்றம் ஆலாம்பாளை யம் ஆகிய பகுதியில் மின் விநியோகம் இருக்காது என செயற் பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ரூ.4 லட்சத்திதிற்கு நிலக்கடலை ஏலம்
அவிநாசி, பிப்.6- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.4 லட்சத்திற்கு ஏலம் போனது. சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில்,120 மூட்டைகள் வந்திருந்தன. குவிண் டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.8,000 முதல் ரூ.8, 200 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.7,800 முதல் ரூ.7,900 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.7,400 முதல் ரூ.7,600 வரையிலும் ஏலம் போனது.மொத்தம் ரூ.4 லட் சத்திற்கு ஏலம் நடைபெற்றது. இதில் 3 வியாபாரிகள், 19 விவசா யிகள் பங்கேற்றனர். சேவூரில் ரூ.4 லட்சத்திதிற்கு நிலக்கட லை ஏலம் நடைபெற்றது. இதில் 3 வியாபாரிகள், 19 விவசாயி கள் பங்கேற்றனர்.
மூலனூரில் ரூ. 72 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
தாராபுரம், பிப்.6- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 72 லட்சத் திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட முதுநிலை செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மூலனூர் ஒழுங் குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. பருத்தியை கொள்முதல் செய்ய திருப் பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 8 ஆயிரத்து 650 க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ. 6 ஆயிரத்து 500 க்கும் சராசரி விலையாக ரூ. 7 ஆயிரத்து 850 க்கும் விலை போனது. மொத்தம் 2790 மூட்டைகள் 920 குவிண்டால் பருத்தி ரூ. 72 லட்சத்து 54 ஆயிரத்து 256 க்கு விற்பனையானது. இந்த ஏலத்தில் 9 வணிகர்கள் பங்கேற்றனர். ஏலத்திற்கான ஏற் பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:46.70/60அடி நீர்வரத்து:825கன அடி வெளியேற்றம்:1126கன அடி அமராவதி அணை நீர்மட்டம்:71.53/90அடி.நீர்வரத்து:192கனஅடி வெளியேற்றம்:218கன அடி
பொது போக்குவரத்தை பலப்படுத்துவோம் சிஐடியு சார்பில் மினி மாராத்தான்
ஈரோடு, பிப்.6- பொது போக்குவரத்தை பலப்படுத்துவது குறித்து விழிப் புணர்வு மினி மாராத்தான் ஈரோட்டில் நடைபெறுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்போம், விபத்தில்லா பய ணத்தை உறுதி செய்வோம், பொது போக்குவரத்தை பலப் படுத்துவோம் என்ற முழக்கங்களுடன் சிஐடியு அரசு போக்கு வரத்து ஊழியர் சங்கம் ஈரோட்டில் மினி மாரத்தான் ஓட்டம் நடத்துகிறது. பிப்ரவரி 12 ஞாயிறன்று காலை 6 மணிக்கு சம்பத் நகரில் தொடங்கும் இந்த மாராத்தான் ஓட்டம் சம்பத் நகரில் தொடங்குகிறது. இதில் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். பெண்களுக்கான ஓட்டம் முடிவடையும் இடம் ரயில் நிலையம் ஆகும். ஆண்கள் பங்குபெறும் மாரத்தான் ஓட்டம் காசிபாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நிறைவு பெறும். இதில் பங்கேற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட் டும் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் பரிசாக ரூ.5 ஆயி ரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம், நான்காம் பரிசு ரூ.ஆயிரம், 5 முதல் 10 வரை இடம் பிடிப்போருக்கு ரூ.500 வழங்கப்படும். பங்கேற்கும் அனை வருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். மினி மாராத்தான் ஓட்டத்தில் கலந்து கொள்ள விரும்பு வோர் 1, குமாரசாமி வீதியில் உள்ள அரசு போக்குவரத்து ஊழி யர் சங்க அலுவலகத்தில் நேரிலோ அல்லது 94863 15903, 94878 98607 என்ற வாட்ஸ்அப் எண்களிலோ வரும் 10ஆம் தேதிக்குள் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலையில் உலா வந்த காட்டுயானை
கோவை, பிப்.6- வடகிழக்கு பருவமழை போதிய அளவில் கை கொடுக்கா ததால், குரங்கு நீர்வீழ்ச்சி வறண்டு கிடக்கிறது. ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியிலும் வனவிலங்குகளுக்கு குடி நீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீரை தேடி அலையும் நிலை உள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி - வால்பாறை சாலை யில் ஞாயிறன்று காலை ஒற்றை யானை உலா வந்தது. அந்த யானை, ஆழியாறு அணைக்கு வந்து தாகத்தை தணித்து சென்றது. இதை அங்கு வந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையி னர், யானையை நவமலை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி னர். இந்த யானை, கடந்த சில நாட்களாக அங்குள்ள சாலை யில் உலா வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். மேலும், வனவிலங்குகள் வெளியே வரு வதை தடுக்க வனப்பகுதியில் தொட்டி அமைத்து, தண்ணீர் நிரப்ப வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
சுமை தொழிலாளர்கள் காங்கிரசுக்கு ஆதரவு
ஈரோடு, பிப்.6- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மறைந்த திருமகன் ஈவெரா வின் தந்தையும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். ஒளிரும் ஈரோடு, மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பின ரும் ஆதரவை தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில் ஈரோடு சுமைப்பணி தொழிலாளர்களும் தங்கள் ஆதரவை தெரி வித்துள்ளனர். ஈரோடு மாநகரில் சுமார் 8 ஆயிரம் தொழிலாளர்கள் சுமை தூக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மத்தியில் ஈரோடு மாவட்ட சுமைதூக்குவோர் சங்கம், சுமை தூக்குவோர் மத்திய சங்கம், தமிழக பொது தொழிலாளர் சங்கம், ஏஐடியுசி சுமைப்பணியாளர் சங்கம், அமைப்புசாரா தொழிலாளர் சங் கம் மற்றும் சிஐடியு சுமைப்பணியாளர் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சங்கத்தினர் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ்.இளங்கோவ னுக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர். முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாள ரும், சிஐடியு துணை தலைவருமான ஆர்.ரகுராமன் தலைமை யில் பெரியார் மன்றத்தில் செயல்வீரர்கள் கூட்டம் வரும் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சுமைப்பணி தொழி லாளர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள உள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
மக்களை அச்சுறுத்திய 42 தெரு நாய்கள் பிடிபட்டன
சேலம், பிப்.6- சேலத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த தெருநாய்களை மாநகராட்சியினர் பிடித்தனர். சேலம் சூரமங்கலம் அந்தோணிபுரம் ஓடை பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அண்மையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக் களை அங்கிருந்த வெறிநாய் ஒன்று திடீரென நடந்து சென்று கொண்டிருந்தவர்களை கடிக்க தொடங்கியது. ஒருவரை அடுத்து ஒருவரை விடாமல் 2 சிறுவர்கள் உள்பட மொத்தம் 19 பேரை வெறிநாய் கடித்தது. இதில், அனை வரும் காயம் அடைந்தனர். இவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து அந்தோணிபுரம் ஓடை பகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், பெரிய அசாம்பாவித சம்பவம் நடைபெறுவ தற்கு முன்பாக தெருநாய்களை கட்டுப் படுத்த மாநகராட்சி அதிகாரிகள் உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரி வித்திருந்தனர், அதன் பேரில் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் உத்தரவின் பேரில், சூரமங்க லம் மண்டல உதவி ஆணையர் செல்வராஜ் மேற்பார்வையில், மாநகராட்சி சுகாதார ஆய் வாளர் பிரகாஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் சுமார் 10க்கும் மேற்பட்டோர் அந் தோணிபுரம் ஓடைப்பகுதி, ஆசாத் நகர், தர்ம நகர், அம்பேத்கர் நகர், ஜங்ஷன் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த சுமார் 42க்கும் மேற்பட்ட தெருநாய்களை திங்களன்று பிடித்தனர். இதன்பின் அந்த நாய்களை சேலம் வாய்க் கால் பட்டறையில் உள்ள கருத்தடை சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், தெருக்களில் சுற்றி தெரியும் நாய்களை தீவிர மாக பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
25 கஞ்சா சாக்லேட் பறிமுதல் - ஒருவர் கைது
சூலூர், பிப். 6- சூலூர் கருமத்தம்பட்டி பகுதியில், கஞ்சா சாக்லேட்டுகள் அதிக அளவில் விற்கப்படுவதும், போலீசாரால் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாக உள்ளது. இந்நிலையில், தனிப்படை போலீசார் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த நபரை நிறுத்தி, சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில், இரண்டரை கிலோ அள வுள்ள கஞ்சா சாக்லேட்டுகள் இருந்தது. இதனையடுத்து அவரிடம் போலீ சார் நடத்திய விசாரணையில், அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் (37) என்பதும், கஞ்சா சாக்லேட் மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்வதும் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து, அவரிடமிருந்து 21 கிலோ கஞ்சா சாக்லேட் மற்றும் இரண்டரை கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மின்தடை
நாமக்கல், பிப்.6- பரமத்தி வேலூர், சோழ சிராமணி துணை மின் நிலை யத்திற்குட்பட்ட பகுதியில் செவ்வாயன்று (இன்று) பரா மரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே சோழ சிராமணி, சுள்ளிபாளையம், சத்திபாளையம், சின்னாம் பாளையம், ஜமீன்இளம் பள்ளி, சித்தம்பூண்டி, மாரப் பம்பாளையம், இ.நல்லா கவுண்டம்பாளையம், பி.ஜி. வலசு உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாயன்று (இன்று) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின் வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.