districts

img

சாலையில் உலா வரும் காட்டெருமைகள் வாகன ஓட்டுநர்கள் அச்சம்

உதகை, ஏப்.12- குன்னூர் சாலையில் உலா வரும் காட்டெருமைகளால் வாகன ஓட்டுநர்கள் அச்சமடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதி களில் காட்டு யானைகள், சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் வனப்பகுதி யில் வறட்சி நிலவுகிறது. இதனால் காட்டு யானை, காட்டெருமை போன்ற வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருகின்றன.  இந்நிலையில், உதகை - குன்னூர் சாலை யில் அருவங்காடு காவல் நிலையம் அருகே திங்களன்று காலையில் காட் டெருமை உலா வந்தது. மாணவ, மாண விகள் பள்ளிகளுக்கு செல்லும் நேரத்தில் காட்டெருமை உலா வந்ததால் அந்த வழியாக சென்றவர்கள் அச்சமடைந்தனர். இதற்கிடையே அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் காட்டெருமையை செல்போனில் படம் பிடித்தனர். மேலும் சிலர் ‘செல்பி’ எடுக்க முயன்ற னர். இதனால் காட்டெருமை சற்று மிரண் டது. உடனே சுற்றுலா பயணிகள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றனர். அதே நேரம், வனவிலங்குகள் சாலையில் நட மாடினால் புகைப்படம் எடுக்கக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.