உடுமலை ஜூலை 13- உடுமலையில் பட்டு விவசாயத்தை பாது காக்கவும், விவசாயிகளின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்கவும், உடுமலை மத்திய பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி விரிவாக்க மையம் முன்பாக, தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச் சங்க விவசாயிகளின் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் ஆலோசகர் பாலகிருஷ்ணன் தலைமையில், மாநிலத்தலைவர் செல்வ ராஜ், செயலாளர் பொன்னுச்சாமி, பொருளா ளர் கனகராஜ் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை, இளம்புழு விலையேற்றம், பெட்ரோல், டீசல் விலை யேற்றம், உரம், மருந்து விலையேற்றம், கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் உற்பத்தி செலவு ஒரு கிலோ பட்டுக்கூடுக்கு ரூ.504 ஆன நிலையில், அதனைவிட குறைந்த விலையில் பட்டுக்கூடு விற்பனை செய்யப் படுவதால் பட்டு வளர்ப்பு விவசாயிகள் பாதிப் படைந்துள்ளனர். எனவே புதிய வீரியம் மிக்க தரமான முட்டைகள் வழங்க வேண்டும், இளம்புழு மனைகளில் இருந்து விவசாயிக ளுக்கு தரமான புழுக்கள் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும், பட்டுக்கூட்டுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும், பட்டுக் கூட்டிற்கு கிலோ ஒன் றிற்கு ரூ.50 ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை மத் திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத் தப்பட்டது.