districts

img

பால் பாக்கியை வழங்கிடுக விவசாயிகள் வலியுறுத்தல்

தருமபுரி, மே 26- பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய பால்பாக் கியை வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட் டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற விவசாயிகள் பேசுகையில், தருமபுரி மாவட்டத்தில் பால் உற்பத்தி விவசாயிகளுக்கு, கூட்டுறவு பால் கொள்முதல் நிலையங்களில்  வழங்க வேண் டிய பால்பாக்கியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பவர்கிரிட்டுக்காக எடுக்கப்பட்ட நிலத்திற்கான இழப்பீடு தொகை வழங்கவேண்டும்.வேளாண்மை பொறியில் துறை மூலம் நிலத்தில் உழவு செய்ய வாடகைக்கு விடப்படுகிறது. குறைந்த டிராக்டர் இருப்பதால் விவசாயிகள் உழவு செய்ய டிராக்டர் கிடைப்பதில்லை எனவே கூடுதல் டிராக்டர் பயன் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.