உடுமலை, செப்.22- அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், அழிந்து போகும் நிலையில் உள்ள பிஏபி வாய்க்கால்களை சீரமைக்க விவசா யிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி திட்டத்தின் கீழ் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகை யில் பகிர்மான கால்வாய்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் தண்ணீர் தரப்படுகிறது. இந்த வாய்க்கால்களை பொதுப் பணித் துறையின் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் விளைநிலங் கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவது, பல இடங்களில் வாய்க்கால் கரையில் மின் கம்பங்கள் அமைத்திருப்பதால் வாய்க்கால்கள் காணாமல் போகும் நிலையில் உள்ளன. மேலும் இருக்கும் வாய்க்கால்களையும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் பராமரிப்பு செய்வது இல்லை. பெயர் அளவில் முதன்மை கால்வாய்களை மட்டும் சரி செய்து விட்டு, கிளை மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்லும் அரணி வாய்க்கால் களைக் கண்டு கொள்ளாததால் பல இடங்களில் வாய்க்கால் கள் வருவாய்த்துறை ஆவணத்தில் மட்டுமே உள்ளன. இப்ப குதி விவசாயிகளின் நலன் கருதி வரலாற்று சிறப்புமிக்க பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் பாசன கால்வாய்களை முழுமையாகப் பராமரிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலி யுறுத்துகின்றனர்.