districts

img

நீர் நிலைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதா?

திருப்பூர், மே 17 – நீர் நிலைகளை தனியாருக்குத் தாரை  வார்க்கும் சட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட  வலியுறுத்தி பல்லடத்தில் தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தமிழ்நாடு அரசு கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றிய 100 ஹெக்டேர் நிலங்கள் வரை, நீர் நிலைகள், நீர் வழித்தடங் கள் உட்பட தனியாருக்கு தாரை வார்க்க  வழிவகுக்கும் தமிழ்நாடு நில ஒருங்கி ணைப்புச் சட்டம்-2023-ஐ திரும்ப பெற வேண் டும். ஒன்றிய அரசு எந்த ஆய்வும் செய்யாமல்  ரேஷன் கடைகளிலும் ஊட்டச்சத்து மையங்க ளிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படு வதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி புத னன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்லடம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பல்ல டம் ஒன்றிய தலைவர் கே.வி.சுப்பிரமணி தலைமை ஏற்றார். விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் ஆர்.குமார், பல்லடம் ஒன்றிய  செயலாளர் வை.பழனிசாமி, தமிழ்நாடு பால்  உற்பத்தியாளர் சங்க மாவட்ட தலைவர் எஸ். கே.கொளந்தசாமி, தமிழ்நாடு தென்னை விவ சாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பரம சிவம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இதில், விவசாயிகள் திர ளானோர் கலந்து கொண்டனர். பல்லடம் ஒன் றிய பொருளாளர் எஸ்.லோகநாதன் நன்றி கூறினார்.