பொள்ளாச்சி, செப்.11- பொள்ளாச்சி அருகே உள்ள புளி யம்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதி கள் கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி புளியம்பட்டி கிராமத்தில், விவசாய விளை நிலங்களில் கழிவு நீர் கலப் பதை தடுத்திட வேண்டும. பல்லடம் சாலை தெற்கு பகுதியில் கால்வாய் விரிவுபடுத்த நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மயான வழித்தடத்தை அக லப்படுத்தி தார்ச்சாலை அமைக்க வேண் டும். ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந் தர செவிலியர் பணி அமைக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. பொள்ளாச்சி புளியம்பட்டி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு விச நிர்வாகி ஆர்.மோகன் தலைமை ஏற்றார். விச மாவட்டச் செயலா ளர் வி.ஆர்.பழனிச்சாமி கோரிக்கைகள் குறித்து உரையாற்றினார் இதில், கிளைத் தலைவர் ஏ.சண்முகம், செய லாளர் என்.பரமசிவம், தென்னை விவ சாயிகள் சங்கச் செயலாளர் ஸ்டாலின் பழனிச்சாமி உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். முடிவில், கோரிக்கை மனு வினை, புளியம்பட்டி பஞ்சாயத்து தலை வரிடம் அளித்தனர்.