districts

img

ஊரக வேலை திட்டத்தில் முறைகேடுகள்: விவசாயிகள் சங்கம் புகார்

உடுமலை, செப். 6- கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க் கையை மேம்படுத்தும், ஊரக வேலை திட்டத் தின் கீழ் மைவாடி ஊராட்சியில் நடைபெற்ற பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெள்ளியன்று உடு மலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற  கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் உடுமலை அரசு  கலைக்கல்லூரியில் வெள்ளியன்று விவசா யிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மடத்துக்குளம் தாலுகா மைவாடி ஊராட்சியில் ஊரக வேலை திட்டத்தில் கீழ்  அரசு ஊழியர் பெயரில் கிணறு வெட்டுவது  மற்றும் இதர வேலைகள் செய்ய ரூ.10 லட்சத் திற்கும் மேல் முறைகேடு நடந்துள்ளது. இது  தொடர்பாக முறையான ஆய்வு செய்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உடுமலை சந்தை பகுதி யில் இட பற்றாக்குறையை போக்கும் வகையில், கொல்லம்பட்டரை பகுதியில் இருக்கும் வேளாண்துறை இடத்தில் விவசாயி கள் விளைப்பொருட்களை விற்பனை செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல்  வேளாண் பொறியியல் துறை அலுவலகம் தனியார் இடத்தில் இருந்து, வேளாண் துறை  அலுவலகத்தின் இடத்தில் செயல்பட நட வடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை உழ வர் சந்தையில் விதிகளை மீறி விவசாயி கள் என்ற பெயரில் போலியான அடையாள  அட்டைகள் வைத்து வியாபாரிகள் காய்கறி களை விற்பனை செய்து வருவதை தடுக்க வேண்டும். உடுமலை தலைமை கால்நடை மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லாத காரணத்தால், தனியார் மருந்து கடைகளில் இருந்து மருந்துகளை வாங்க வேண்டிய நிலையில் விவசாயிகளும், பொதுமக்களும் உள்ளனர். அதே போல் நட மாடும் கால்நடை வாகனங்கள் எந்த பகுதிக் கும் வருவது இல்லை. உடனடியாக அனைத்து மருந்துகளும் கிடைக்கும் வகை யில் மருத்துவமனையை இயக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். உடுமலை மற்றும்  மடத்துக்குளம் பகுதிகளில் போலியான பெய ரில் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து உள்ளதை அகற்ற வேண்டும். பிஏபி  கால்வாய்களில் குப்பைகளை கொட்டு வதை தடுக்க வேண்டும். உடுமலை பிர தான கால்வாய் முதல் கிளை கால்வாய் வரை  இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி முறை யான பாசனம் கிடைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். உடுமலையில் அனைத்து முக்கிய  வீதிகளிலும் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும். தொடர் திருட்டுகளை தடுக்கும் வகையில் காவல்துறையினர் இரவு நேரங்க ளில் ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக  கட்டப்பட்ட சுற்றுச்சுவர் பல ஆண்டு காலம்  பயன்படுத்தி வந்த பாதையை அடைத்து  கட்டப்பட்டுள்ளது. அதே பேருந்து நிலை யத்தின் அருகில் உள்ள கழுத்தருத்தான் பள் ளத்தில் தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மடத்துக்குளம் பகுதியில் தனி யார் குவாரியின் மண் அருகில் இருக்கும்  குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங் களில் படிவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவ டிக்கை எடுக்க வேண்டும். கல்குவாரிக ளின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட விவசா யிகள் மற்றும் பொது மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். மேலும், உடுமலை சர்வே துறையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வருவாய் கோட்டாட்சியர் நடவ டிக்கை எடுக்காவிட்டால், சர்வே துறையை  கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங் கத்தின் மாவட்டத்தலைவர் எஸ்.ஆர். மதுசூத ணன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் பஞ் சலிங்கம், சிஐடியு பஞ்சாலை சங்கத்தின் செல் வராஜ் உள்ளிட்ட திரளான விவசாயிகள் மற் றும் துறை அதிகாரிகள்  கலந்து கொண்ட னர்.

சம்பிரதாயமாக நடைபெற்ற கூட்டம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மதி யம் 2.30க்கு  நடைபெறுவதால் விவசாயி கள் மற்றும் பொது மக்கள் அதிக எண் ணிக்கையில் கலந்து கொள்ள முடிவது இல்லை. மேலும் பெயர் அளவில் தான்  அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண் டார்கள். கடந்த கூட்டத்தில் விவசாயிகள்  அளித்த மனுவிற்கு பதிலும் கிடைக்க வில்லை, ஏதோ கூட்டம் நடத்த வேண் டும் என்ற பெயருக்கு கூட்டத்தை நடத்தி  முடித்தார் வருவாய் கோட்டாச்சியர் என விவசாயிகள் சிலர் பேசிகொண்டனர்.