ஈரோடு, ஜன.29- கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி தலை மையிலான ஒன்றிய அரசைக் கண்டித்து ஈரோடு மாவட் டத்தில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. தில்லி விவசாயிகள் போராட்டத்தில் கொடுத்த வாக்குறு தியை நிறைவேற்றாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், டிராக்டர் பேரணி நடை பெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலை வர் பி.எஸ்.பழனிச்சாமி தலைமையில், கோபி சீதா கல்யாண மண்டபம் அருகிலிருந்து பேரணி துவங்கியது. முக்கிய வீதி கள் வழியாக கோபி பேருந்து நிலையத்தில் பேரணி நிறை வடைந்தது. அதன்பின் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக் கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.வி.மாரிமுத்து, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே. சண்முகவள்ளி, விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலை வர் எஸ்.முத்துசாமி ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக வி.ஆர்.மாணிக்கம் நன்றி தெரிவித்தார். இதேபோல் பெருந்துறையில் நடைபெற்ற பேரணியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.எம்.முனுசாமி தலைமை வகித்தார். மனித நேய மக்கள் கட்சியின் மாநில செயலாளரும், மணப் பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது, தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் கி.வெ.பொன்னையன், விவ சாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.விஜயராக வன் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக, மாநில துணைத் தலைவர் பொன்னுசாமி நன்றி கூறினார்.