districts

img

இழப்பீடு தராமல் மின்கோபுரம் அமைக்கக்கூடாது

கோவை, மார்ச் 28- உயர்மின் கோபுரம் அமைக்க இழப்பீடு தராமல், மின் கம்பிகள் அமைக்கும் பணியை தொடரக் கூடாது என வலியுறுத்தி கோவை  கரும்பத்தம்பட்டியில் விவசாயிகள் மின்கோபுரம் மீது ஏறி போராட்டத் தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட் டது. கோவை மாவட்டம், கருமத்தம் பட்டி அருகே உள்ள எலச்சிபாளை யம் கிராமத்திலிருந்து ஈரோடு மாவட்டம், ஈங்கூர் வரை உயர் மின் னழுத்த கோபுரங்கள் அமைக்கப் பட்டு வருகிறது. இதில் 70 சதவிகித பணிகள் மட்டுமே நிறைவடைந் துள்ள நிலையில், உயர்மின் கோபு ரங்கள் விவசாயிகள் நிலத்தில் செல் வதால் அவர்களுக்கு இழப்பீடு தரு வதாக மின்சார வாரியம் தெரிவித்து அதற்கான தொகையும் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், இதுவரை அதற்கான இழப்பீட்டு தொகை  விவசாயிகளுக்கு வழங்கப்பட வில்லை.  இந்நிலையில், எலச்சிபாளை யத்தில் விவசாயி ஒருவரது நிலத் தில் போலீஸ் பாதுகாப்புடன் மின் வாரியத்தினர், உயர்மின் கோபு ரத்தை அமைக்க முற்பட்டனர்‌. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப் பகுதியில் உள்ள விவசாயிகள் ஒன்று திரண்டு உயர் மின் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவலறிந்து சம் பவ இடத்திற்கு வந்த சூலூர் வட் டாட்சியர் மற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகள், விவசாயிகளி டம் பேசி உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக பெற்றுத்  தருவதற்கு நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்தனர். இத னால், விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும், அதிகாரிகள் உரிய இழப் பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வில்லையெனில், தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.