அவிநாசி, ஜூலை 11 – அவிநாசி அருகே போத்தம்பா ளையத்திற்கு உட்பட துளசிபுரம் பகுதியில் விவசாய விளைநிலங் களை வேறு பயன்பாட்டுக்கு எடுப் பதை கைவிடுமாறு தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் அவிநாசி ஒன்றிய எட்டாவது மாநாட்டில் வலியுறுத்தப் பட்டது. விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் முத்துரத்தினம் தலைமை யில் நடைபெற்ற மாநாட்டில் புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி வார்டு உறுப்பினர் குமாரசாமி வரவேற்றார். விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.கேகொளந்த சாமி துவக்கி வைத்தார். கரும்பு டன் ஒன்றுக்கு தேர்தல் வாக்குறுதிபடி ரூ.4000 வழங்கவும், விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு எடுக்கும் நடவடிக் கையை கைவிடவும், உயர் மின் அழுத்த கோபுரங்களை அமைத்த தால் பாதித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், மான் மற் றும் மயில்களால் ஏற்படும் பயிர் இழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில், தாலுக்கா பகுதியில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்கவும், பசும்பால் ரூ.42 எருமை பால் ரூ.51 என விலை வழங்க கோரியும், கரவை மாடுகள் கால்நடைகளுக்கு உரிய கால இடை வெளியில் நோய் தடுப்பூசி போடவும், அரசு அறிவிக்கும் விவசாயிகளுக் கான மானியத் திட்டத்தை அனைத்தும் விவசாயிகள் சென்றிடு வதை உறுதிப்படுத்தவும் வலியு றுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. ஒன்றிய செயலாளர் எஸ். வெங்க டாசலம் வேலை அறிக்கையை முன் வைத்தார். இதைத் தொடர்ந்து நிர்வா கிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றிய தலைவர் முத்தரத்தினம், ஒன் றிய செயலாளர் வெங்கடாசலம், ஒன் றிய பொருளாளர் குமாரசாமி உட்பட 21 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன் நிறைவு செய்து வைத் துப் பேசினார். இதில் திரளான விவசா யிகள் கலந்து கொண்டனர்.