அவிநாசி,செப்.22 அவிநாசியில் திருப்பூர் வருவாய் கோட்டம் அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளியன்று நடை பெற்றது. அதில், விவசாய பொருட் களை சேதம் செய்யும் மான் மயில்க ளுக்கு சரணாலயம் அமைக்க வேண் டும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங் கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. அவிநாசி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திருப்பூர் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் சார் ஆட்சியர் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற் றது. வட்டாட்சியர் மோகன் முன்னி லையில் வகித்தார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துன் மாவட்டச் செயலாளர் குமார் பேசு கையில், விவசாயிகள் பயிரிடுவதை மான், மயில் போன்ற விலங்குகள் சேதம் செய்து வருகிறது. இதற்கு சரணா லயம் அமைக்க வேண்டும். விவசாயி களின் ஆடுகளை வெறிநாய்கள் கொன்று விடுகிறது. இதனை கட்டுப்ப டுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பருவமழை பெய்யாத கார ணத்தால் நிலக்கடலை விளைச்சல், பாதிக்கப்பட்டுள்ளது எனவே விவசா யிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். திருமுருகன்பூண்டி நக ராட்சி பகுதியில் உமையஞ்செட்டிபா ளையம் சாலைப் பணிகள் இரண்டு வரு டங்களாக நடைபெற்று வருகிறது. இதனை விரைவில் முடிக்க வேண்டும்.
ராக்கியாபாளையம் கிராமம் உமையஞ் செட்டிபாளையம் அருகில் இரண்டு குட்டைகள் உள்ளது. இதனை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறினார். இதனைத்தொடர்ந்து, ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி பேசுகையில் கணியம்பூண்டி பகுதியில் தனியா ருக்குச் சொந்தமான நிலத்தில் கழிவு நீர் தேங்கியுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று பலமுறை பல கூட்டங் களில் தெரிவித்து விட்டேன், இதுவரை தீர்வு காணப்படவில்லை. உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயி கள் சாலை அமைப்பதற்கும் இடம் கொடுத்து வருகிறார்கள். அதேபோல குட்டைகளில் பாதை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துகிறது. ஆனால் தற்போது வரை வகை மாற்றம் செய்யா மல் உள்ளது. இதே நிலை நீடித்தால் எதிர் காலத்தில் பிரச்சனை ஏற்படும் வாய்ப் புள்ளது. எனவே உரிய முறையில் தீர்வு காண வேண்டும் என கூறினார். இதையடுத்து தமிழ்நாடு விவசாயி கள் சங்க நிர்வாகி அப்புசாமி பேசுகை யில், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும். நெரிப்பெ ரிச்சல் கிராமம், வாவி பாளையத்தில் செயல்படாமல் உள்ள கால்நடை மருத் துவமனையை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பெருமாநல் லூர் காவல் நிலையத்திற்கு கூடுத லாக காவலர்கள் நியமிக்க வேண்டும் என்று பேசினர். விவசாயிகள் இக் கோரிக்கைகளை மனுவாகவும் அளித் தனர்.