உடுமலை, ஆக.13 - விவசாயிகளை மண் எடுக்க விடாமல் தடுப்பதுடன், கனிமவளக் கொள்ளையர்கள், மாஃபியாக்கள் என்று விவசாயிகளை கொச்சைப்ப டுத்தி, பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வாளவாடியில் அனைத்து விவசாயிகள் ஆர்ப்பாட் டம் நடத்தினர். விவசாயிகள் மண் எடுப்பதை திட்டமிட்டு தடுப்பவர்கள் மீதும், அவர்களுக்கு துணை போகும் அரசு அதிகாரிகளின் மீதும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். சட்டப்படி மண் எடுக்க விவசாயிகளுக்கு அனு மதி தர வேண்டும் என்று 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வளவாடி கிராம நிர்வாக அலுவலகத்தின் முன்பாக அனைத்து விவசாயிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாளவாடி ஊராட்சிமன்றத் தலைவர் தேவராஜ் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில், தமிழக அரசு விவசாயிகள் தங்களுடைய விளையிநிலங்க ளுக்கு அருகில் உள்ள குளம் மற் றும் குட்டைகளில் இருந்து வண்டல் மண்களை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்று அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்நிலையில் உடுமலை ஒன்றி யம் வாளவாடி கிராமத்தில் சப்டி யார் குட்டையில் ஆகஸ்ட் 7, 8, 9 தேதிகளில் விவசாய பயன்பாட் டிற்கு மண் எடுக்க முறையான அனு மதி பெற்று, விவசாயி மண் எடுத் தபோது, கனிமவளம் கொள்ளை போவதாகவும், அரசு அனுமதி வழங்கிய அளவுகளுக்கு மேல் மண் எடுப்பதாகக் கூறி சிலர், அரசு மற்றும் காவல்துறைக்கு தெரி வித்து, சப்டியர் குட்டையில் மண் எடுப்பதைத் தடுத்தார்கள். முறையான அனுமதி பெற்று மண் எடுப்பதை தடுக்கும் நோக்கில் காவல்துறையில் புகார் தெரிவித்த வர்கள் மற்றும் தவறு செய்த காவல் துறை, வருவாய்த்துறை அதிகாரி கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும். உடனடி யாக மண் எடுக்க விவசாயிக ளுக்கு அனுமதி தர வேண்டும் என் றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியு றுத்தினர். இது குறித்து தமிழ்நாடு விவ சாய சங்க மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதணன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கை யில், உடுமலை பகுதியில் சிலர் சேர்ந்து கொண்டு தமிழக அரசு வண்டல் மண் எடுக்க அனுமதி செய்த மறுநாளே, உடுமலை வட் டாட்சியர் அலுவலகத்தில் கனிமவ ளங்கள் கொள்ளை போகும் என்று மனு கொடுத்தார்கள். பின்னர் மனு கொடுத்த அவர்களே, மண் எடுக்க அதிகாரிகள் காலதாமதம் செய்கி றார்கள் என்றும், காலதாமதம் செய் யாமல் விவசாயிகளுக்கு மண் எடுக்க அனுமதி தர வேண்டும் என் றும் மாற்றி மனுத் தருகிறார்கள். கனி மவளக் கொள்ளையர்கள், மாஃபி யாக்கள் என விவசாயிகளைக் இழி வுபடுத்துகிறார்கள். இவர்கள் விவ சாயிகளை வண்டல் எடுக்க விடா மல் தொடர் குளறுபடி செய்கிறார் கள். பெரிய வளவாடி பகுதியில் சப் டியார் குட்டையும், நடுக்குட்டையும் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நீர் மேலாண்மையை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள் ளது. இதில் கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தொடர் போராட்டத்தின் காரணமாக நடுக்குட்டையில் இருந்த தனியார் ஆக்கிரப்புகளை அகற்றி, நடுக்குட்டை விவசாயி கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப் பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு ஆக்கி ரப்பில் இருந்த குட்டையை தூர் வாரி முறையான கட்டுமானம் செய்ய அரசு அனுமதி அளித்த தன் அடிப்படையில் மண் எடுக்கப் பட்டதால் மழை காலங்களில் குட் டையில் தேங்கிய நீர் இப்பகுதி விவ சாயிகளுக்கு உதவியது. இது போல் விவசாயிகளுக்கு உதவும் வகையில் சப்டியார் குட் டையில், நீர் சேமிக்கும் வகையில் மண் எடுக்க அரசு வழங்கிய அனும தியை தற்போது தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மீண்டும் விவசாயிகளுக்கு மண் எடுக்க அனுமதி தர வேண் டும் என்றார். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத் தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் உடுக்கம்பாளையம் பரமசிவம், விவசாய தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் ஒன்றியச் செயலாளர் முத்துசாமி உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.