districts

img

ஆனைமலையாறு – நல்லாறு அணை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி, ஜூன் 22- ஆனைமலையாறு – நல்லாறு அணை திட்டத்தை விரைந்து நிறை வேற்ற வேண்டும் என வலியுறுத்தி பொள்ளாச்சியில் விவசாயிகள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். லட்சக்கணக்கான விவசாயிகளின் நலன் கருதி ஆனைமலையாறு - நல் லாறு அணை திட்டத்தை உடனே நிறை வேற்ற வேண்டும். தென்னை நல  வாரியத்தை பொள்ளாச்சியில் அமைக்க வேண்டும். தென்னை சார்ந்த  தொழில்களை பாதுகாக்க வேண்டும். பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றி யுள்ள  கிராமப்புற மக்களின் குடிநீர் மற்றும் விவசாயிகளின் நீர் ஆதா ரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமை வகித்தார். இதில், அகில இந் திய விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட  செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் (சிபிஐ) மாவட்ட துணைத்தலைவர் பி.ஆர்.பழனிச்சாமி, ஆனைமலை தாலுகா பொறுப்பாளர் எம்.மணிகண்டன், துணைத்தலைவர் கே.கோபிநாத் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறை வாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஆர்.பெரி யசாமி நன்றி கூறினார்.