சென்னை, ஜன. 31 - விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி களை ஒன்றிய அரசு நிறைவேற்றாமல் உள் ளது. இதனையடுத்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் திங்களன்று (ஜன.31) நாடு முழுவதும் துரோக தினம் அனுசரிக்கப்பட்டது. 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லி எல்லைகளை முற்றுகையிட்டு ஓராண்டு காலம் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைந்தது. அரசின் ஒடுக்கு முறைகளை எதிர்த்து நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயி கள் களப்பலியாகினர். இதன்காரணமாக ஒன்றிய அரசு 3 விவசாய விரோத சட்டங்களை யும் திரும்ப பெற்றது. குறைந்தபட்ச ஆதரவு விலை கோரிக்கை குறித்து முடிவெடுக்க ஒரு குழு அமைக்கப் படும், அதில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள். தற்போது அரசு கொள்முதல் செய்யும் தானியங்க ளின் அளவு குறைக்கப்படாது. மின்சார சட்டத் திருத்தம் குறித்து, தொடர்புடைய அனைத்து பிரிவினரிடமும் விவாதித்தபின் நாடாளு மன்றத்தில் விவாதிக்கப்படும்.
போராட்டக் களத்தில் உயிர்நீத்த உழவர் களின் குடும்பத்திற்கும், மாநில அரசுகள் இழப்பீடு வழங்கவும், உழவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் மாநில அரசு கள் திரும்பப் பெறவும் தேவையான நடவ டிக்கைகள் எடுக்கப்படும் என்று ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தது. இதனையடுத்து விவசாயிகள் போராட்டத் தை திரும்ப பெற்றனர். இதன்படி ஒன்றிய அரசு நடந்து கொள்ள வில்லை. எனவே, நாடாளுமன்றம் கூடும் (ஜன.31) அன்று துரோக தினமாக அனுசரித்து இயக்கங்களை நடத்துமாறு ஐக்கிய விவ சாயிகள் முன்னணி அறிவித்தது. அதன்படி, நாடு முழுவதும் பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக சென்னை மாவட்டம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் லில்லி மேரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில ஒருங்கிணைப் பாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி மாசிலாமணி, அகில இந்திய விவசாயிகள் தொழி லாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தென்சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.