districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஏர்ஹாரன்கள் பறிமுதல்: அபராதம் விதிப்பு

சேலம், அக்.9- சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அதிக ஒலி எழுப்பும் பேருந்துகளில் ஆய்வு செய்து, ஏர்ஹாரன்களை அதிகாரி கள் பறிமுதல் செய்தனர். சேலத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள், அதிகள வில் ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்களை பயன்படுத்தி, மக்க ளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள்  குவிந்தன. இதையடுத்து, சேலம் கிழக்கு வட்டார போக்கு வரத்து அலுவலர் (பொ) தாமோதரன் தலைமையில், திங்க ளன்று காலை புதிய பேருந்து நிலையத்தில் சோதனை மேற் கொண்டனர். இதில், 50க்கும் மேற்பட்ட மேற்பட்ட பேருந்து களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, 25க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 10க்கும் மேற் பட்ட பேருந்துகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது.

மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

நாமக்கல், அக்.9- மரவள்ளிக்கிழங்கின் விலை டன் ஒன்றிற்கு ரூ.2 ஆயிரம் வரை உயர்ந் துள்ளதால், பரமத்திவேலூர் பகுதி விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி களான எஸ்.வாழவந்தி, பெரியகரச பாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங் குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மர வள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட் டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் மர வள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத் திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பப் கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதி களில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். ஆலைகளில் மர வள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப் படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்ய வும் வியாபாரிகள் அதிக அளவில் வாங் கிச் செல்கின்றனர். மரவள்ளி கிழங்கு களை வாங்கும் ஆலை உரிமையாளர் கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச் சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். இதனிடையே கடந்த வாரம் மர வள்ளிக்கிழங்கு டன் ஒன்றிக்கு ரூ.11 ஆயிரத்து 500க்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம்  வரை உயர்ந்து ரூ.13 ஆயிரத்து 500க்கு விற்பனையாகிறது. அதேபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்றிக்கு ரூ.13 ஆயிரத்து 500க்கு விற்பனையானது. தற்போது விலையில் எந்த மாறுதலும் இல்லாமல் விற்பனையாகிறது. மரவள்ளி கிழங்கு  வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந் துள்ளது. விலை உயர்ந்துள்ளதால் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர். மேலும், கிழங்கின் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஈரோடு, அக்.9- பவானி அருகே 200 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் களை சித்தோடு பகுதியில் உள்ள கடைகளுக்கு வேன் மூலம் சென்று விற்பனை செய்து வருவதாக சித்தோடு போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பட்டறை மேடு பகுதி யில் சித்தோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த னர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் அருகே சந்தேகப் படும் வகையில் வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. உடனே போலீசார் அந்த வேனை சோதனையிட்டதுடன், அருகே உள்ள வீட்டிலும் சோதனையிட்டனர். அப்போது அந்த வீட்டில்  தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 140 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொ டர்ந்து அந்த வீட்டில் இருந்தவரை பிடித்து போலீசார் விசா ரணை மேற்கொண்டதில், அவர் பவானி, சொக்காரம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த வில்சன் (63) என்பதும், அவர் தடை செய் யப்பட்ட புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து  வேனில் ஏற்றி, கடைகளுக்கு சென்று விற்றதும் தெரியவந் தது. மேலும், சொக்காரம்மன் நகரில் உள்ள அவருடைய வீட் டின் அருகே உள்ள உறவினர் வீட்டிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததையும் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர். இதையடுத்து சொக்காரம்மன் நகரில் உள்ள வில்சனின் உறவினர் வீட்டில் பவானி மற்றும் சித்தோடு போலீசார் சோதனையிட்டு அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து வில்சனை போலீசார் கைது செய்ததுடன், வீடுக ளில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ தடை  செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் விற்பனைக் காக பயன்படுத்தப்பட்ட வேன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

வாலிபர் கொலை வழக்கு 8 பேருக்கு ஆயுள் தண்டனை

சேலம், அக்.9- சேலம் மாநகரம், கிச்சிப்பாளையத்தில் வாலிபர் கொலை  வழக்கில் சம்மந்தப்பட்ட 8 பேருக்கு  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சேலம் மாநகரம், கிச்சிப்பாளையம் தேசிய புனரமைப்பு  காலனியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருடனான தகராறில் 2015 ஆண்டு பிப்பரவரி 10 ஆம்தேதி, விஜயகுமாரின் வீட் டிற்கு ஆயுதங்களுடன் சென்று அவரையும் அவரது பெற் றோர் மற்றும் சகோதரி ஆகியோரை தாக்கியதில்,  விஜய குமார் பலத்த காயமுற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார். இதுசம்மந்தமாக, கிச்சிப்பாளையம் காவல் நிலையத் தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கொலையாளி கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ் வழக்கில் திங்களன்று சேலம் 3 ஆவது கூடுதல் நீதிமன்றம் தீர்ப் பளித்தது.  இதில், குற்றவழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராத தொகை யும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

பாய்லர் வெடித்து 5 பேர் காயம்

திருப்பூர், அக். 9 - திருப்பூரில் தனியார் பனியன் நிறுவனத்தில் அயனிங் ஸ்டீம் பாய்லர் வெடித்து 5 பேர் காயமடைந்தனர். இவர்கள்  சிகிசிசைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். திருப்பூர் பாரப்பாளையம் அடுத்த வடக்கு தோட்டம் பகு தியில் ஜெயரத்தினம் எக்ஸ்போர்ட்ஸ் என்ற தனியார் நிறுவ னம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் மங்களூ ரைச் சேர்ந்த பிரதீப் செட்டி. இந்த நிறுவனத்தில் பின்னலாடை  உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில்  திங்களன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த தொழிலா ளர்கள் தங்களது அன்றாட பணிகளை மேற்கொண்டனர். அப் பொழுது, அயனிங் செக்சன் இன்சார்ஜ், மணிகண்டன் மற்றும்  கண்ணதாசன் ஆகியோர் உற்பத்தி செய்த பனியன்களை அயன் செய்வதற்காக அயனிங் பாய்லரை ஆன் செய்துள்ள னர் அப்பொழுது எதிர்பாராத விதமாக அயனிங் பாய்லர் திடீ ரென வெடித்து சிதறியது. இதில் கண்ணதாசன், குமார் ஆகி யோருக்கு வலது புறம் நெற்றியில் காயம் ஏற்பட்டது. அங்கு  பணியாற்றிய வட மாநில தொழிலாளி பாபு நரேன் என்பவருக் கும் பலத்த காயம் ஏற்பட்டது. மணிகண்டன் சிறுகாயங்க ளுடன் உயிர் தப்பினார். மேலும் அருகில் இருந்த இரண்டு பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நிறு வனத்தில் பணியாற்றிய மற்ற தொழிலாளர்கள் காயம்பட்ட வர்களை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்த விபத்து தொடர்பாக திருப்பூர் மத்திய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

வீட்டுமனை கிரயம் செய்து தராமல் ஏமாற்றுவதா? காவல் நிலையம் முன்  குடும்பத்துடன் தர்ணா

அவிநாசி, அக்.9- அவிநாசியில் வீட்டுமனைக்கு முன்பணம் செலுத்தியும், கிரயம் செய்து தராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  காவல் நிலையம் முன் பட்டியலினத்தைச் சேர்ந்தோர் குடும் பத்துடன் ஞாயிறன்று தர்ணாவில் ஈடுபட்டார். அவிநாசி அருகே எம்.நாதம்பாளையம் பகுதியில் வசித்து  வருபவர் சி.அருள்தாஸ் (42). பனியன் தொழிலாளி. இவரது  மனைவி சத்யா (32). இவரது மகள் ஜெஸ்மி (12), மகன்  பிரித்வ் (6). இவர், அதே பகுதியில் தனியார் அமைத்திருந்த  வீட்டுமனை பிரிவுக்கு முன்பணம் செலுத்தியும் கிரயம் செய்து  கொடுக்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தர்ணாவில் ஈடுபட்டார். இது குறித்து அருள்தாஸ் கூறுகையில், எம்.நாதம்பாளை யம் பகுதியில் அமைக்கப்பட்ட வீட்டுமனை பிரிவில் 47ஆவது  எண் கொண்ட வீட்டுமனையை பதிவு செய்து, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் ரூ.4.50 லட்சம் பணம் செலுத்தினோம். ஆனால்  வீட்டுமனை பிரிவு உரிமையாளர் பெருந்துறைச் சேர்ந்த ஈஸ்வ ரமூர்த்தி, அவரது மேற்பார்வையாளர் நந்தகுமார் ஆகியோர்  இதுவரை கிரயம் செய்து கொடுக்கவில்லை.  எனவே நாங்கள்  செலுத்திய பணத்தை திருப்பி கேட்டதற்கு, இரு முறையும் செல்லாத காசோலைகளை கொடுத்து விட்டனர். பட்டியலி னத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக நாங்கள் செலுத்திய  பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல், அந்த வீட்டுமனை பிரி வில் கிரயம் செய்து கொடுக்காமல் எங்களை ஏமாற்றுகின்ற னர். எனவே உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துணை கண்காணிப் பாளர் பௌல்ராஜ் தலைமையிலான போலீஸார் வீட்டுமனை  பிரிவு உரிமையாளரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாட்களுக்குள் செலுத்திய பணத்தை திருப்பி  கொடுக்க உரிமையாளருக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்த னர்.

அவிநாசி கடை வீதியில் ஆக்கிரமிப்பு: ஆய்வு செய்து  நடவடிக்கை எடுக்க சிஐடியு வலியுறுத்தல்

அவிநாசி, அக்.9 அவிநாசி கடை வீதியில் யார் ஆக்கிர மிப்பு செய்திருக்கிறார்கள் என்பதை அனைத்து அரசுத் துறை அதிகாரிகள் ஆய்வு  செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு  வியாபாரம் நடத்தி பிழைப்பு நடத்தி வரும் சாலையோர வியாபாரிகளின் கடைகளை முறைப்படுத்த வேண்டும் என்று அவிநாசி பொதுத் தொழிலாளர் சிஐடியு சங்கம் வலியு றுத்தி உள்ளது. அவிநாசி நகரில் சாலையோர வியாபாரி களின் கடைகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அங்கு நிரந் தரக் கடை நடத்தும் வணிகர்கள், வியாபா ரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த நோக்கத்திற்காக திங்களன்று அவிநாசி வணிகர் சங்கம் கடையடைப்புக்கும் அழைப்பு விடுத்தனர். இதைத் தொடர்ந்து  அவிநாசியில் கடையடைப்பு நடத்தப்பட்டது.  அதேசமயம் அவினாசி தினசரி மார்க்கெட்  பகுதியில் முன்புறக் கடைகள் அடைக்கப் பட்டு, உள் கடைகள் திறக்கப்பட்டு இருந் தது. அதேபோல நகைக் கடைகள், அச்ச கங்கள், ஜெராக்ஸ் கடைகள் போன்றவை  கடையின் முன்புற கதவு பாதி அடைக்கப் பட்டு விற்பனை நடைபெற்றது. அரசு மருத்து வமனை அருகில் செயல்பட்டு வரும் ஆவின்  டீக்கடை அடைக்கப்பட்டது. இதனால் நோயாளிகள் தேநீர், பால் பிஸ்கட் போன் றவை இல்லாமல் அவதிப்பட்டனர். உழவர்  சந்தை, பூக்கடைகள் வழக்கம் போல் செயல் பட்டது. வணிகர் சங்கத்தினர் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்த நிலையிலேயே அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடத்தி, இதை மறுபரிசீலனை செய்து கடையடைப்பு முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று  வேண்டுகோள் விடுத்தனர். மேலும் வணிகர்  சங்க கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தவும் அனைத்து அரசியல் கட்சிகளும் அழைப்பு விடுத்தன. இந்த சூழ்நிலையில் கடையடைப்பு நடத் தப்பட்டது குறித்து சிஐடியு அவிநாசி பொதுத்  தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் அ. ஈஸ்வரமூர்த்தி பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது, சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக அவி நாசி வியாபாரிகள் சங்கம்  நடத்தியிருக்கும் இந்த கடையடைப்பு தேவையற்றது. சாலை யோர வியாபாரிகளை முறைப்படுத்த வேண் டும் என்று சிஐடியு சங்கம் வலியுறுத்தியுள் ளது. அவிநாசி கடைவீதி முழுவதும் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், பேரூ ராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறை அதி காரிகள் இன்றைக்கு நேரில் சென்று  பார்க்க வேண்டும். யார் கடைவீதியை அடைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்பது தெரியும். எனவே இதை முறைப்ப டுத்தினாலே எந்தவித போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாது. சாலையோர வியா பாரிகள் தமது வாழ்க்கையை வாழ்வதற்கு  சிறு வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார் கள். அவர்கள் வாழ்வாதாரத்தைப் பறிப்பது நியாயமல்ல. வியாபாரிகள் சங்கம் என்ற  பெயரில் சில பேர் ஆசைக்காக கடைய டைப்பு நடத்தியுள்ளனர். இது தேவையற்றது.  இந்த போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.  மேலும், அவிநாசி பகுதி மக்களுக்கு எந்தவித  இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்று தெரி வித்தார்.

பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய மாற்றுத்திறனாளி கோரிக்கை


திருப்பூர், அக். 9 - திருப்பூர்  மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் மாற் றுத்திறனாளி ஆவார். திருப்பூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று கோரிக்கை  மனு அளித்தார். அதில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக சுகாதார துறையில் ஆய்வக உதவியாளராக  பணியாற்றி வரும் அவரை சமீபத்தில் பணி  நீக்கம் செய்துள்ளனர். தொகுப்பூதிய அடிப் படையில் பணியாற்றிய தன்னை பணிநீக் கம் செய்திருப்பது செல்லாது எனவும், ஏற்க னவே தனது பணி தொடர்பாக வழக்கு  தொடர்ந்து அதற்கான நீதிமன்ற தடை யாணை  இருக்கும்நிலையில், தற்சமயம்  தன்னை பணி நீக்கம் செய்திருப்பது செல் லாது. எனவே தனது பணி நீக்க உத்தரவை  ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டு கோள் விடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் மனு அளித்தார்.

கொல்லிமலையில் தொழில்நுட்ப பயிற்சி மையம் திறப்பு

நாமக்கல், அக்.9- கொல்லிமலையில் ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் அமைக் கப்பட்ட புதிய தொழில்நுட்ப பயிற்சி மையத்தை வேலை வாய்ப்பு துறை ஆணையர் வீரராகவராவ் திறந்து வைத் தார். நாமக்கல் மாவட்டம், செம்மேட்டில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.34 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் 4.0 தொழில் நுட்ப மையத்தை தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் வீரராகவராவ் திறந்து வைத்தார். இந்நிகழ் வில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா, சட்டமன்ற உறுப்பி னர் பொன்னுசாமி, கொல்லிமலை அட்மா குழு சேர்மன் செந்தில்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   இந்நிகழ்வில் பங்கேற்ற வீரராகவராவ் பேசுகையில், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதி யாக 87.5 சதவிகித பங்களிப்புடன் ரூ.34 கோடியே 65 லட்சம்  செலவில் நவீன தொழில்நுட்பங்களுடன் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ரூ.3 கோடியே 73 லட்சம் செ லவில் கட்டிடப் பணிகளும், ரூ.30 கோடியே 69 லட்சம் செல வில் எந்திரங்கள், உதிரிபாகங்கள், நவீன மென்பொருட்கள் ஆகியவை வாங்கப்பட்டுள்ளன. 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை ரூ.2 ஆயிரத்து 877 கோடியே 48 லட்சம் செலவில் 4.0 தரத்தில் தொழில் திறன் பயிற்சிகள் வழங் கும் வகையில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது, என்றார்.

தொடர் விலை சரிவு: பூக்களை தருமபுரி மார்கெட்டிலேயே விட்டுச்சென்ற விவசாயிகள்

தருமபுரி, அக்.9- விலை தொடர்ந்து சரிந்த நிலையில், பூக் களை வாங்க வியாபாரிகள் யாரும் வாங்க வராததால், விற்பனைக்கு கொண்டு வந்த பூக்களை தருமபுரி மார்கெட்டிலேயே விவ சாயிகள் விட்டுச்சென்ற சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் பிர தான தொழிலாக இருந்து வருகிறது. முக்கிய மாக மாவட்டத்தில் பல்லாயிரம் ஏக்கரில் சாமந்தி, சம்பங்கி, செண்டு மல்லி, கோழி கொண்டை, குண்டு மல்லி, சன்னமல்லி, ஜாதி  மல்லி, அரளி, பன்னீர் ரோஸ், பட்டன் ரோஸ்  உள்ளிட்ட பலவகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக் கள் பல மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக் கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப் படுகிறது. மேலும், மாவட்டத்தில் விளையும் பூக்கள் அனைத்தும் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் பூ மார்க்கெட் டிற்கு விவசாயிகள் கொண்டு வந்து, வியாபா ரம் செய்து வருகின்றனர். இதனை உள்ளூர் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இந்நி லையில், பூக்களின் வரத்து அதிகரிப்பால் புரட்டாசி முதல் சனிக்கிழமையிலிருந்து 3  ஆவது சனிக்கிழமை வரை பூக்களின் விலை  படுவீழ்ச்சியை கண்டது. மேலும், புரட்டாசி மாதத்தில் பூக்களின் தேவை அதிகரிக்கும். ஆனால், பூக்களின் வரத்து அதிகரிப்பால் விலை படுவீழ்ச்சி அடைந்தது. பண்டிகை முடிந்த நிலையில் திங்களன்று மேலும் பூக்களின் விலை குறைந்து சாமந் திப்பூ கிலோ 5 முதல் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டாதாலும், வாங்குவதற்கு வியா பாரிகள் இல்லாததாலும் பூக்களை மார்க் கெட்டிலேயே விவசாயிகள் விட்டு விட்டு  சென்று விட்டனர். அங்குள்ள பூ வியாபாரிகள் இந்த பூக்களை அள்ளி ஓரமாக போட்டு  வைத்துள்ளனர். இச்சம்பவம் அங்கிருந்தவர் களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

சொந்த பயன்பாட்டு வாகனங்களை முறைப்படுத்திடுக

நாமக்கல், அக்.9- சொந்த பயன்பாட்டு வாகனங்களை முறைப்படுத்த வேண்டும் என சுற்றுலா வாடகை வாகன உரிமையாளர்கள் சங்கத் தினர் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட சுற் றுலா வாடகை வாகன உரிமையாளர்கள் மற் றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் சரவணன் தலைமையில், ஆட்சியரி டம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இதில், நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலா வாகனம் வைத்திருப்பவர்கள் வாடகைக்கு வாகனங் களை இயக்குபவர்கள் என பல்லாயிரக்க ணக்கான குடும்பங்கள் இந்த தொழிலை நம்பி உள்ளனர். இந்நிலையில், தனி நபர்க ளால் இயக்கப்படும் சொந்த பயன்பாட்டு வாகனங்களை பொதுமக்களுக்கும், பள்ளி  குழந்தைகளுக்கும் வாடகைக்கு இயக்கு வதை முழுமையாக தடுத்து நிறுத்த வே டும். வாடகைக்கு விடப்பட்டு பிடிபடும் சொந்த  வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உச்ச பட்ச அபராதம் விதிக்க வேண்டும். லாப நோக் கத்திற்காக இடைத்தரகர்கள் மூலம் தேர்தல் பணிகளுக்கும் மற்றும் அரசு பணிகளுக்கும் சொந்த பயன்பாட்டு வாகனத்தை அதிகப்படி யான அரசு அதிகாரிகள் பயன்படுத்தி வரு கின்றனர். இதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். தேர்தல் பணிகள் மற்றும் அரசு  பணிகளுக்கு சுற்றுலா வாடகை வாகனங் களை பயன்படுத்தி எங்களது வாழ்வாதா ரத்தை காப்பாற வேண்டும் என வலியுறுத் தப்பட்டுள்ளது.

குழந்தை கடத்தல் விவகாரம்: போலீசாரிடம்  சிக்கிய பெண் ஒரு மணி நேரத்தில் உயிரிழப்பு

கோவை, அக்.9- குழந்தை கடத்தல் விவகாரத்தில், போலீசாரிடம் சிக்கிய தம்பதியினரில் பெண் குற்றவாளி ஒரு மணி நேரத்தில் உயிரி ழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த 5ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த  முத்துராஜ் என்பவர் குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்ற  போது அவரின் ஒன்றரை வயது குழந்தை காணாமல் போனது. இதனையடுத்து, அக்குழந்தை கடத்தி செல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந் நிலையில் போலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப் படையில், குழந்தையை திருடியவர்கள் கோவை மாவட்டம், பூண்டி பகுதியில் இருப்பதாக தெரியவந்ததன் பேரில் உடனடி யாக கோவை ஆலாந்துறை போலிசாருக்கு தகவல் அளித் துள்ளனர்.  பின்னர் டிஎஸ்பி ராஜபாண்டி தலைமையில் காவல் ஆய் வாளர் முத்துப்பாண்டி கொண்ட குழுவின் ஆலாந்துறை போலீசார் பூண்டி சாலை முட்டத்துவயல் குளத்தேரி பகுதி யில் இருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன்(43), திலகவதி (35) தம்பதியை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், அவர்கள் குழந்தையை திருடியதாக ஒப்புகொண்டனர். இந் நிலையில் குழந்தையை சேலம் மாவட்டம், ஆத்தூரில் இருப்ப தாக கூறி உள்ளனர். பின்னர் ஆலந்துறை போலீசார் சேலம்  மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்து குழந்தை இருக் கும் இடத்தை தெரிவித்துள்ளனர். இதனிடையே குற்றவாளியான திலகவதி கைது செய்யப் பட்ட ஒரு மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். இவர் சேலத் திற்கு விசாரணைக்காக கொண்டு செல்லும்போது உயிரிழந் தாரா? அல்லது காவல் நிலையத்தில் விசாரணையின் போது உயிரிழந்தாரா? என்பது குறித்து காவல்துறையின் உயர் அதி காரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது திலகவதியின் உடலை கோவை போளுவம்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்துள்ளனர். உடற்கூறு ஆய்விற் காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உள்ளதாக காவல்துறை வட்டராங்கள் தெரிவித்துள்ளது. 

உள் விளையாட்டு அரங்கம் திறப்பு

தருமபுரி, அக்.9- தருமபுரி, கிருஷ்ணா புரம் ஊராட்சி, கீழ்காலனி பகுதியில் நமக்கு நாமே திட் டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இறகு பந்து உள் விளையாட்டு  அரங்கம் அமைக்கப்பட்டது. இதனை சட்டமன்ற உறுப்பி னர் கோவிந்தசாமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் நீலாபுரம் செவ் வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.