உதகை, மார்ச் 30- உதகை தாவரவியல் பூங்கா நர்சரியில் வைக் கப்பட்டுள்ள தொட்டி களில் ஆப்கானிகா மலர் கள் பூத்து குலுங்குகின் றன. உதகையில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விரு மாதங்களும் வெளி மாநில, மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை தருவார்கள். உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் உதகை தாவரவியல் பூங்காவிற்கு செல்வது வழக்கம். இதனால், தாவரவியல் பூங்காவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பலவகையான மலர் செடிகள் நடவு செய்யப்படும். அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளிலும் மலர்கள் செடிகள் நடவு செய்யப்படும். மே மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நடைபெறும் இந்த மலர்க் கண்காட்சியை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் உதகையில் குவிவது வழக்கம். தற்போது மலர் கண்காட்சிக்காக உதகை தாவரவியல் பூங்கா தயார் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, பூங்கா முழுவதிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 15 ஆயி ரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பரா மரிக்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க பூங்காவில் உள்ள கண்ணாடி மாளி கையை அலங்கரிப்பதற்காக 15 ஆயிரம் தொட்டிகளில் பல் வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த மலர் செடிகள் பூங்காவில் உள்ள மேல் நர்சரியில் வைக் கப்பட்டுள்ளன. இந்த நர்சரியில் வைக்கப்பட்டுள்ள மலர் செடி களில் தற்போது ஆப்கானிகா, பிரமிளா, சைக்னோமல் உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் பூத்துள்ளன. ஓரிரு நாட்களில் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் இந்த மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம் செய்யப்படும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது.