districts

img

சர்க்கரை ஆலையில் விவசாயிகள் வாக்குவாதம்

தருமபுரி, பிப்.3- பாலக்கோடு சர்க்கரை ஆலைக்கு டிராக்டரில் விவ சாயிகள் கொண்டு வந்த கரும்புகளை இறக்கவிடாத லாரி உரிமையாளர்களுடன் விவசாயிகள் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள திம்மம்பட்டி பகுதியில் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. கரும்பு அரவைக்கு தேவையான கரும்புகளை லாரி உரிமையாளர்கள் ஒப் பந்த அடிப்படையில், லாரிகளில் கரும்பு பாரங்களை ஏற்றி வருகின்றனர். விவசாயி கள் தங்களுடைய சொந்த டிராக்டரில் கரும்பு களை ஏற்றி வர அனுமதி வழங்கப்பட்டுள் ளது. இந்நிலையில், சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநர் விதிமுறைகளை மீறி லாரியில் ஏற்றி வந்த கரும்பினை முதலில் அரவைக்கு அனுமதிப்பதாகவும், டிராக்டரில் ஏற்றிவரப் பட்ட விவசாயிகளின் கரும்புகளை ஒரு வாரத் திற்கும் மேலாக காலம் கடத்தி அரவைக்கு அனுமதிப்பதாகவும், இதனால் கரும்பின் எடை குறைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படு கிறது. லாரி உரிமையாளர்கள் தங்களது சுயலாபத்திற்காக டிராக்டர்களில் ஏற்றி வரும் கரும்புகளை இறக்க விடாமல் தடுத்து வருவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். இந்நிலையில், விவசாயிகள் டிராக்டரில் கொண்டு வந்த கரும்புகளை இறக்க விடாமல் லாரி உரிமையாளர்கள் தடுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற் பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு போலீசார் மற்றும் சர்க்கரை ஆலை நிர்வாக அதிகாரி கள் இருதரப்பினரையே பேச்சுவார்த்தை நடத்தி டிராக்டரில் இருந்த கரும்புகளை இறக்க அனுமதித்தனர். இதனால் அப்பகுதி யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.