நாமக்கல், அக். 3- பள்ளிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சரிவர தண்ணீர் வராததால் 15 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு பாசனம் இன்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளை யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேட்டூர் அணையில் இருந்து மேற்கு கரை வாய்க்கால் மூலம் விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் விடுவது வழக்கம். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மேற்கு கரையிலி ருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறந்த விடப்பட்ட தண் ணீர் கடைமடை வரை வராததால் இப்ப குதி விவசாயிகள் விவசாயம் செய்ய முடியவில்லை. நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்ட பொழு தும் முறையான பதில் சொல்வதில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக் கின்றனர். கிளை வாய்க்கால் சரிவர தூர்வாரப்படாததால் கடைமடை வரை தண்ணீர் வருவதில்லை. கால்வாய் முழுவதும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அடைப்பை அதிகாரிகள் சீர் செய்தால் மட்டுமே தண்ணீர் கடைசி வரை வரும். இந்த வருடம் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வாழ்வாதாரமே கேள்விக்குறியாக உள்ளதாகவும், 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள் ளது. இனியாவது அதிகாரிகள் இந்தப் பகுதியில் கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.